Followers

Saturday, May 10, 2014

பித்ருதோஷம் ஒரு சில தகவல்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் வரும் முக்கால்வாசி பேருக்கு பித்ருதோஷம் இருக்கின்றது. பித்ருதோஷத்தைப்பற்றி நான் பல பதிவுகளில் எழுதியுள்ளேன். அதனை படித்து பார்த்தால் அதன் வீரியம் எப்படிப்பட்டது என்பது தெரியும்.

நான் ஒரு சில நேரங்களில் இதனைப்பற்றி சிந்தித்தது உண்டு அது என்ன என்றால்  ஏன் நம்மிடம் இத்தனை பேர்கள் வருகிறார்கள் என்ன காரணம் என்று பார்க்கும்பொழுது ஒரு உண்மை தெரியவந்தது.

பித்ருதோஷத்தில் பின்புலத்தில் ஒரு ஆத்மா கண்டிப்பாக இருக்கும். இது சமயம் பார்த்து அவ்வப்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருக்கும்.ஆத்மாவின் அடியை தாங்கமுடியாது. நாம் என்ன நினைத்தாலும் நமக்கு முன்பு இது வந்து நிற்க்கும்.

சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் இதற்கு பரிகாரம் என்று அலைந்துக்கொண்டு இருப்பார்கள். எதிலும் இது சரியாகாது. சம்பந்தப்பட்ட ஜாதகர் இதற்காக பணத்தை வீணாக்கிக்கொண்டு இருப்பார்கள். எதனை தின்றால் பித்தம் தணியும் என்று பார்ப்பார்கள். இதனை வைத்தே நம் சோதிடர்கள் கறந்துவிடுவார்கள். நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் இந்த ஆத்மாவை சாந்தப்படுத்த தெரிந்த நபர்களிடம் சென்றால் கண்டிப்பாக இதற்கு வழி செய்துவிடலாம்.

உங்களின் பின்புலத்தில் இருந்து உங்களை தாக்கும் ஆத்மாவை பிடித்து அதற்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டால் போதுமான ஒன்று. இதற்கு நீங்கள் கேரளாக்காரர்களிடம் சென்றால் அதற்கு வழியை சொல்லுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செய்துக்கொண்டு வந்துவிட்டால் உங்களின் வாழ்வில் நல்ல மகிழ்ச்சியான தருணத்தை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: