Followers

Friday, May 30, 2014

புண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                    புண்ணிய சேர்க்கும் வழியைப்பற்றி அவ்வப்பொழுது சொல்லி வருகிறேன். அதில் புதியதாக ஒன்றை பார்க்கலாம். 

நான் ஆன்மீகப்பயிற்சி செய்யும்பொழுது ஒன்றை செய்வேன். எங்கு ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்வேன். பெரும்பாலும் பண உதவியை செய்வேன். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஏன் அவ்வாறு செய்தேன் என்றால் அவர்கள் வைத்திருக்கும் சக்தியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்க்காக அப்படி செய்தேன். 

ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் உதவி செய்தால் அவர்கள் அறியாமல் அவர்கள் வைத்திருக்கும் சக்தி நமக்கு உதவி செய்யும். நாம் தினமும் ஆன்மீகப்பயிற்சி செய்தாலும் நமது கர்மா மற்றும் தீயசக்திகள் நம்மை தொடர்ந்து செய்யமுடியாதபடி செய்துவிடும். அதில் இருந்து நாம் தப்பிக்க இப்படி ஆசீர்வாதம் பெறவேண்டும். 

ஒரு பெரிய பணக்காரர்களாக கூட எளிதில் ஆகிவிடலாம் ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக மாறுவதாக இருந்தால் அவ்வளவு எளிதில் மாறிவிடமுடியாது. அப்படி ஒரு எதிர்ப்பு நமக்கு வரும். ஆன்மீகப்பயிற்சி செய்வதற்க்கு தடையை ஏற்படுத்திவிடும்.

பல சாமியார்களுக்கு நான் பணஉதவியை செய்திருக்கிறேன். ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் பணஉதவியை செய்தால் அவர்கள் எப்படியும் நமக்கு திருப்பிக்கொடுத்துவிடுவார்கள். அவர்கள் திருப்பிக்கொடுக்கும்பொழுது நாம் அதனைபெறக்கூடாது. ஆன்மீகவாதிகள் எதயையும் தன்னோடு கணக்கில் வைக்கமாட்டார்கள். எத்தனையோ பேர்க்கு இன்று வரை நான் உதவி செய்கிறேன். அவர்கள் என்னிடம் கொண்டுவந்து அதிகமாக பணத்தை கொடுப்பார்கள். ஒரு நாளும் அதனை பெறமாட்டேன். 

ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் செய்யும் பணஉதவி நமக்கு பல மடங்கு வேறு வழியில் வந்துவிடும் ஆனால் அவர்களின் ஆசீர்வாதத்தை நாம் இழந்துவிடகூடாது. நான் இன்று வேலையில் இறங்கி செய்தேன் அது உடனே நடைபெறுகிறது என்றால் அதற்கு காரணம் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களின் முழுஆசியும் எனக்கு கிடைத்த காரணத்தால் மட்டுமே.

நீங்கள் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு பல கோவில்கள் சென்று வருவீர்கள் அது தவறு இல்லை ஆனால் இப்படி சாமியார்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்க்கு முயற்சி செய்யுங்கள். சாமியாரை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்கள் வைத்திருக்கும் சக்தியின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

ஆசீர்வாதத்தை பெறலாம் என்று எனக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருக்காதீர்கள். வெளியில் எத்தனையோ நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

marketanalyst said...

aanmeegavathiyai yeppadi kand
ukolvathu iyya.

Unknown said...

very good sir nice advise
sampathkumar