Followers

Tuesday, May 13, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது எல்லாம் என்னிடம் பல நண்பர்கள் போன் செய்து சார் நான் தொழில் செய்து கடனில் மாட்டிக்கொண்டேன் அதற்கு தீர்வு சொல்லுங்கள் என்று கேட்கின்றனர். சோதிடத்தை நான் விட்டுவிட்டு கம்பெனிகளுக்கு ஆலாேசனை வழங்கினால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்பது போல் இருக்கின்றது. 

ஒரு தொழில் வெற்றி அடையவேண்டும் என்றால் உங்களின் மூளை மட்டும் போதாது என்று நான் பல முறை சொல்லிவருகிறேன். அதனை நீங்கள் நம்புவதில்லை தொழில் கீழே விழுந்தவுடன் என்னை தேடி வருகின்றனர். உங்களிடம் ஏதாவது இருந்தால் தானே அதனை மறுமுறை நிமிர்த்த முடியும். நீங்களே ஒடி ஒழிய வேண்டிய நேரத்தில் என்னை தொடர்புக்கொண்டால் என்ன செய்யமுடியும். 

நன்றாக செல்லும்பொழுது ஏன் தேவையில்லாமல் ஜாதககதம்பத்திற்கு பணம் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு நடத்திக்கொண்டு இருந்தால் தோல்வி அடையும்பொழுது ஜாதககதம்பத்திற்க்கு வரகூடாது.

நான் அம்மனை வைத்து தான் வேலை செய்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதனை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அம்மன் கொட்டிக்கொடுக்கும். நான் வியாபார தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு சொல்லுவது இது மட்டுமே என்னை எந்தளவுக்கு கவனிக்கிறாயோ அந்தளவுக்கு உங்களுக்கு பணம் வரும். நீங்கள் ஏமாற்ற நினைத்தால் உங்களுக்கு எது வரவேண்டுமே அது வரும்.

நீங்கள் தான் முடிவு எடுக்கின்றீர்கள். நான் இதில் தலையீடுவதில்லை. உங்களின் கணக்கை கூட கேட்பதில்லை. அம்மன் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் என்று எனக்கு தெரியும். உங்களிடம் பணமே இல்லை என்னை வந்து சந்தித்து பணம் உங்களுக்கு வருகிறது என்றால் என்னை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லுவேன். அம்மன் உங்களுக்கு கொட்டிக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: