Followers

Friday, May 30, 2014

சோதிடத்தோடு ஆன்மீகத்தை சேருங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு அனைவருக்கும் சோதிடம் தெரியும். சோதிடம் தெரிந்தளவுக்கு மக்களுக்கு பிரச்சினையில் இருந்து தப்பிக்க தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதற்கு காரணம் சோதிடம் தெரிந்தளவுக்கு பரிகாரம் செய்ய தெரியவில்லை. 

ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அந்த பிரச்சினையை தடைசெய்ய தான் தெரியவேண்டுமே தவிர பிரச்சினை வருகிறது என்று பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. அந்த பிரச்சினையை தீர்க்க வழியை தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

முன்பு எல்லாம் சோதிடத்தில் இது தான் பிரச்சினை என்று சொல்லதெரியாமல் இருந்தார்கள். இன்று பிரச்சினை இது தான் என்று நன்றாக தெரிந்தும் அதனை தீர்க்க வழி தெரியவில்லை. இதற்கு காரணம் சோதிடத்தை படித்தளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய தெரியவில்லை. ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பிரச்சினையை தீர்க்கமுடியும்.

சோதிடம் படிக்கும்பொழுதே ஆன்மீகத்தில் ஏதாவது ஒரு தெய்வத்தை எடுக்கமுயற்சி செய்யுங்கள். ஒரு தெய்வம் உங்களிடம் இருந்தால் ஜாதகம் வழியாக வரும் பிரச்சினையை எளிதில் தீர்க்கமுடியும்.

என்னிடம் வரும் வாடிக்கையாளர்க்கு எல்லாம் நான் அதிகப்பட்சம் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தே அனைத்தையும் முடித்து கொடுத்து அனுப்பிவிடுவேன். அதற்கு காரணம் என்னிடம் அம்மன் அந்தளவுக்கு சக்தியோடு இருப்பதால் எளிதில் நடைபெறுகிறது. சோதிடத்தோடு நீங்கள் ஆன்மீகத்தையும் இணைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: