Followers

Saturday, May 10, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    தினமும் யாராவது ஒரு நபர் எனக்கு போன் செய்து எனது தொழிலை காப்பாற்றி தாருங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு தொழிலை இவர்கள் செய்யும்பொழுது உள்ள நம்பிக்கை கொஞ்ச நாளில் கிரகங்களின் தாக்குதலுக்கு ஆளாகி அந்த தொழில் கீழே விழுந்துவிடுகிறது.

என்னை பொருத்தவரை ஒரு தொழில் கீழே விழும்பொழுது அந்த தொழிலை தூக்கி நிறுத்த என்ன செய்யவேண்டுமோ அதனை தான் செய்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் வருபவர்களுக்கு நிறைய பேர் இப்படி எடுத்து செய்துக்கொடுத்து இருக்கிறேன். புதியதாக வருபவர்கள் நிறைய கடனோடு வருகிறார்கள்.

தொழிலை நடத்தமுடியாமல் இவர்கள் கடன் பெற்றுவிடுகிறார்கள். கடன் பெற்றதை தொழில் நடத்தி அதில் இருந்து எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றால் இந்த ஜென்மத்திற்க்கு நடக்காதா ஒன்று. ஏன் என்றால் இவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகம்.

நேற்று விரைய தசாவில் நான் சொன்ன விசயம் தான் இது அனைவரும் கடைபிடிக்கவேண்டும். விழுந்த தொழிலை எல்லாம் இப்பொழுது நீங்கள் தூக்கி நிறுத்துவதற்க்கு என்னை நாடினால் அதற்கு நீங்கள் அதிக பணம் கொடுக்கப்படவேண்டும் என்று தான் நான் சொல்லுவேன். நீ நடத்திக்கொடு அதன் பிறகு நாங்கள் தருகிறோம் என்ற பதிலை எல்லாம் இப்பொழுது சொல்லமுடியாது. 

ஒரு தொழில் செய்பவர்களுக்கு நான் செய்யும் ஆன்மீக விசயம் படிப்படியான ஒன்று. அவர்களுக்கு நான் செய்யும் வேலை எல்லாம் ஒரு நாளில் நடைபெற்ற விசயம் கிடையாது. பல நாட்கள் போராடி அதனை தக்க வைத்திருக்கிறேன். நீங்கள் ஒரு நாளில் வந்து எனக்கு கடன் ஏறிவிட்டது என்னை காப்பாற்று என்றால் அது கண்டிப்பாக முடியாத ஒன்று. 

உங்களின் ஜாதகத்தை பார்த்து அதற்கு பரிகாரத்தை மட்டும் நான் செய்துக்கொடுக்கலாம். அதாவது பரிகாரம் என்ன என்று சொல்லுவேன் அதனை நீங்கள் செய்யவேண்டும். 

நான் தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீக வழியில் செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லும்பொழுது என்னை நம்பி வந்த அத்தனை பேரும் இன்று நல்ல நிலைக்கு உயர்த்திக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் இப்பொழுது மாதம் மாதம் சரியான பணத்தை எனக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். 

அந்த நேரத்தில் இதனைப்பற்றி தெரியாமல் நான் எழுதுவதை வைத்து மட்டும் நம்பி வந்தவர்களை தவிர புதியதாக நான் உங்களின் தொழிலை எடுக்கவேண்டும் என்றால் பணம் கட்டவேண்டும். ஏற்கனவே நான் எடுத்த தொழிலுக்கு பணம் வாங்காமல் செய்துக்கொடுத்தேன். இப்பொழுது அப்படி கிடையாது.

தனிநபருக்கு பரிகாரம் கூட இப்பொழுது நான் செய்ய போவதுகிடையாது. தொழில் செய்பவர்களுக்கு நான் செய்துக்கொடுக்கவே எனக்கு நேரம் போதவில்லை இதில் எங்கு நான் தனியாக பரிகாரம் செய்ய போவது. 

அவர்களின் கம்பெனியில் பங்குதாரர்கள் போல் எனக்கு குறிப்பிட்ட தேதியில் பணத்தை செலுத்துபவர்களுக்கு எப்படி பெரிய அளவில் உயர்த்தவேண்டும் என்று தான் நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுதும் போல் அம்மனிடம் உங்களின் வேண்டுதல்களை வைத்தால் போதும் அது நடத்திக்கொடுக்கும்.

என்னிடம் தொழிலுக்கு என்று இணைந்தவர்களுக்கு இப்பொழுது அம்மன் கொட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏகாப்பட்ட வாய்ப்புகளை அள்ளி தருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: