Followers

Thursday, May 8, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    வெளியூரில் இருந்து இன்று காலை சென்னை வந்துவிட்டேன். நான் எங்கு சென்றாலும் சந்திக்கும் நண்பர்கள் எப்படி சக்தியை எடுப்பது என்பதை தான் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் எப்படியும் ஆன்மீகவாதியாக மாறிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள் இது சந்தோஷமான விசயம்.

உங்களுக்கு எல்லாம் நான் சொல்லுவது ஏதோ ஒரு வழியை பின்பற்றி வந்தாலும். நாம் முதலில் எந்த ஒரு அடையாளத்தை தன் மீது வைத்துக்கொண்டு தேடுதல் இருக்ககூடாது. முதலில் நீங்கள் யார் என்று பார்க்கவேண்டும். சிவனை பின்பற்றலாம் பெருமாளை பின்பற்றலாம் இயேசுவை பின்பற்றலாம் வேறு மதத்தையும் பின்பற்றலாம் பின்பற்றுவதற்க்கு முன்பு முதலில் நீங்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

நான் எதற்கு பிறந்தேன் நான் யார் என்ற கேள்விக்கு தேடுதலை ஆரம்பித்தால் போதும். நான் எதற்கு இந்த குடும்பத்தில் பிறந்தேன் நான் ஏன் இப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன கேள்வி உங்களின் மனதில் எழுந்தால் நீங்கள் தேடுதலை ஆரம்பித்துவிடுவீர்கள்.

கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டால் அது கட்சி மாதிரி ஆகிவிடும். நான் பெருமாளின் ஆள் அல்லது இயேசுவின் ஆள் என்று போய்விடுவீர்கள். உங்களின் தனித்தன்மை என்ன என்று புரிந்துக்கொண்ட பிறகு நீங்கள் பெருமாள் ஆளா அல்லது இயேசுவின் ஆளா என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

எந்த ஒரு மதத்தின் சட்டதிட்டத்திற்க்குள் நீங்கள் சிக்கிவிடாதீர்கள். நீங்கள் யார் என்பதை தெரிந்துக்கொண்ட பிறகு அதனை பார்த்தக்கொள்ளலாம். மதத்திற்க்குள் சென்றுவிட்டால் நீங்கள் அவர்கள் சொல்லும் விதியை பின்பற்றவேண்டும். 

விதி என்று வந்துவிட்டால் கட்டுபாடு உங்களின் மேல் விழுந்துவிடும். அதன் பிறகு நீங்கள் சிக்கிக்கொண்டுவிடுவீர்கள். உங்களின் சுதந்திரத்தை ஒரு நாளும் பிறர்க்கு என்று விட்டுக்கொடுக்ககூடாது. நீங்கள் தனித்தன்மையானவர் என்பதை புரிந்துக்கொண்டு உங்களின் தேடுதலை ஆரம்பித்தால் உங்களுக்குள் அற்புதம் நடக்க ஆரம்பிக்கும். இதனை பின்பற்றி பாருங்கள் அதன் பிறகு எப்படி சக்தியை எடுப்பது என்பதை பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: