Followers

Thursday, May 1, 2014

நண்பரின் பதில்


நான் கேட்ட கேள்விக்கு நண்பர் சிவக்குமார் அவர்கள் எனக்கு எழுதியதை உங்களுக்கு பதிவு இடுகிறேன். ஒரு சின்ன திருத்தம் வைத்து பதிவை தருகிறேன்.

சார்,
நீங்கள்  சொல்வது போல் , மனிதன் கஷ்ட காலத்தில்  மட்டுமே ஆன்மிகத்தை நாடி செல்வான்ஆனால் நான்ஆன்மிகத்தை தேடிய காரணம்நம்மோட  இந்து  மதத்தை பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், இந்து மதம் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள நான் இணையத்தில் தேட ஆரம்பித்தேன் ,அப்படி தேடி தேடி படித்ததில் இந்து மதம் ஒரு விஞ்ஞான மதம் என்று எனக்கு புரிந்தது. அப்படி தற்செயலாக தேடிய பொழுது தான் உங்களுடைய ஜாதக கதம்பம்  பற்றி தெரியவந்தது.  அதில்  நீங்கள் கூறிய எளிய முறை பரிகாரம் , பூஜை முறைகள்  எனக்கு பிடித்தது .நம்பினால் நம்புங்கள் பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி .இதற்கு முன் நான் இரண்டு தளம் மட்டுமே படித்து வந்தேன். அதில்  இந்து மதம் பற்றிய விஞ்ஞான கருத்துக்கள் கூறினாலும் , உங்களுடைய எல்லா பிரச்சினையும் தீர தியானம் செய்யுங்கள் / ஆன்மிக குருவை  சந்தியுங்கள் என்று தான் சொல்கின்றனர். நீங்கள் ஒருவர் தான் உங்கள் வீட்டில் இருந்தே  எளிய முறை பரிகாரம் மற்றும் பூஜை செய்தால் போதும் என்று சொல்கின்றீர்கள்.

நீங்கள்  சொல்வது  உண்மை தான் எந்த ஒரு ஆன்மிகவாதியும், அவர் செய்யும் பூஜை முறைகளை வெளியே  சொல்வது கிடையாது  மாறாக ஆன்மிக வகுப்புக்கு வாங்க / தியானம் செய்யுங்கள் என்று தான் சொல்கின்றனர். உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். உங்களுடைய ஜாதக கதம்பம் மிகவும் அருமை  ராஜேஷ் சுப்பு சார்.


Regards.
sivakumar.
Bangalore.

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே. இவரைப்போல் பல நண்பர்களின் பதிலையும் பதிவில் தருகிறேன். எனக்கு எழுதி அனுப்புங்கள். அனைவரும் எனக்கு எழுதி அனுப்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: