Followers

Wednesday, May 14, 2014

அறுபதில் பதினெட்டு


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்று சொல்லுவதற்க்கு காரணம் இருக்கிறது. ஆன்மீகம் உங்களின் ஆத்மாவை நல்லது செய்வதற்க்கு மட்டுமில்லாமல் உங்களின் உடலையும் நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது என்பதால் ஆன்மீகத்தை கடைபிடியுங்கள் என்று சொல்லுவேன்.

ஆரோக்கியமான உடல் இருந்தால் உங்களின் வாழ்வில் நோயின்றி வாழ்வதற்க்கு உதவும். இன்றைய நவீன உலகத்தில் அனைத்து உணவு பொருட்களும் இரசயன உரத்தால் உருவாக்கப்படுகிறது. அதனை உட்க்கொள்ளும் மனிதனின் உடல் கெடுகிறது. அதனை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் உடற்பயிற்சி செய்வதால் ஒரளவு அதனை வெளியேற்றலாம்.

ஆன்மீகப்பயிற்சி உங்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. முதிய வயது வந்தாலும் உங்களின் சக்தி குறையாமல் இருப்பதற்க்கு ஆன்மீகம் உதவும். பதினெட்டு வயதில் உள்ள இளைஞர்களின் உடல் எப்படிப்பட்ட சக்தியோடு இருக்கின்றதோ அதே சக்தியை அறுபது வயதில் கூட வெளிப்படுத்தமுடியும். நான் பல சாமியார்களை பார்த்து இருக்கிறேன். அவர்களின் முதிய வயதிலும் சின்ன பையன் போல் இருப்பார்கள் அதற்கு காரணம் அவர்கள் செய்யும் ஆன்மீகப்பயிற்சி மட்டுமே.

எந்த சாமியாராவது இளம்வயதில் சாவுகிறார்களா என்று பாருங்கள். ஏன் சாகவில்லை என்றால் தன்னை ஒரு வழிப்படுத்திக்கொண்டு வாழ்க்கிறார்கள். அந்த வழிப்படுத்துதல் அவர்களை காப்பாற்றுகிறது.

இன்றைய காலத்தில் உங்களின் மகன் அல்லது மகள் உங்களை கவனிக்காமல் சென்றால் கூட தன்னிடம் சக்தி இருந்தால் நின்று உழைத்து தன்னுடைய காலத்தை பார்த்துக்கொள்ளலாம். தன் உடம்பு நன்றாக இருந்தால் மட்டுமே எல்லாம் கிடைக்கும். தன் உடம்பை விட்டுவிட்டால் அனைத்தும் போய்விடும்.

ஒரு சில நண்பர்கள் என்னிடம் வந்து நான் கூட ஆன்மீகப்பயிற்சி பல வருடங்கள் செய்கிறேன் என்று சொல்லுவார்கள். அதே நேரத்தில் நமது காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்கள் கூட என்னிடம் வந்து நான் ஒழுங்காக பயிற்சி செய்கிறேன் என்று சொல்லுவார்கள். நான் அவர்களை பார்த்தாலே தெரிந்துவிடும் இவர்கள் செய்கின்றார்களா அல்லது செய்யாமல் இருக்கின்றார்களா என்று தெரியும். வேறு ஒரு வழியாக சோதனை செய்வதும் உண்டு. ஒரு ஆன்மீகவாதியின் கை நரம்பை பார்த்து இவர் ஆன்மீகவாதியா அல்லது பொய்யரா என்று தெரிந்துக்கொள்ளமுடியும்.

உடற்பயிற்சி செய்தால் கி்டைக்ககூடிய உடல் சக்தியை காயத்ரி மந்திரம் வழியாக நாம் பெறமுடியும். இரண்டையும் அவர்களின் கை நரம்பு வழியாக நமக்கு தெரிந்துவிடும். இதனை எப்படி பார்ப்பது என்பதை பதிவில் சொன்னால் புரியாது. நேரில் நாம் சந்திக்கும் நாளில் அதனை பார்த்துக்கொள்ளலாம்.

காயத்ரி மந்திரம் என்றால் சாதாரணமான ஒரு விசயம் கிடையாது. அது மிகப்பெரிய மந்திரம். என்ன யாரையும் நான் இதுவரை சோதனை செய்யவில்லை. சோதனை செய்தால் மாட்டிக்கொள்வீர்கள்.


உங்களின் வாழ்வு தினமும் மகிழ்வோடு மலர்ச்சியோடு இருக்கவேண்டும் என்றால் ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை தினமும் மேற்க்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: