Followers

Saturday, May 17, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    சந்திரனின் பலத்தை உயர்த்த என்ன வழி என்று நண்பர் கேட்டார். அவரின் வழியாக உங்களுக்கும் சொல்லுகிறேன்.

சந்திரனின் பலனை உயர்த்த நீங்கள் திங்கள்கிழமை அன்று சந்திர ஒரையில் சிவவழிபாடு செய்யவேண்டும். பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்யவேண்டும். வளர்பிறையில் நீங்கள் கடற்கரையில் நிலாவை பார்க்கும்பொழுது உங்களுக்குள் ஒரு அமைதி ஏற்பட்டு சந்திரனின் பலம் கூடும். அனைத்தும் உங்களுக்குள் தான் நடைபெறவேண்டும். அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கும்.

பெளர்ணமி அன்று சிவன்கோவிலில் கிரிவலம் வாருங்கள். திருவண்ணாமலையில் மட்டும் கிரிவலம் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வழிபட்டு வரலாம். அதே நேரத்தில் பெளர்ணமி அன்று ஒரு சில அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அதில் கலந்துக்கொண்டு வழிபாடு செய்யுங்கள்.

ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் சந்திரனின் பலம் குறையும். பலத்தை குறைக்க வேண்டும் என்று வேண்டும்பொழுது உங்களுக்கு சந்திரன் பலன் குறையும். இப்படியும் வழிபாடு செய்யலாம். சந்திரனின் பலத்தை குறைத்து ஒரு சில வேலைகளை செய்வார்கள். நீங்கள் வேண்டும்பொழுதே சந்திரனின் பலம் குறையவேண்டும் என்று வேண்டுதல் வைக்கவேண்டும்.

சந்திரனுக்கு பிடித்த விசயங்களில் நீங்கள் கவனம் செலுத்தும்பொழுது கூட சந்திரனின் பலத்தை கூட்டமுடியும். எப்படி கூட்டினாலும் தேய்பிறையில் சந்திரனின் பலம் குறைய தான் செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

KJ said...

Thank you very much sir.

nallur parames said...

Rompa nanri sir

திருவாரூர் சரவணா said...

ஆஞ்சநேயரை வழிபட்டால் சந்திர பலம் குறையும் என்றால் வேறு ஒரு பவர் கூடுமே? அது எது?

மேலும் சந்திர பலம் என்றால் மனம் பலமடைவதுதானே. அது பலம் குறைய வேண்டும் என்றால் எதற்காக என்று எனக்கு புரியவில்லை. -அல்லது நீங்கள் கூற வந்ததை நான் புரிந்துகொள்ளவில்லையா?