Followers

Sunday, May 4, 2014

பகிர்ந்து கொடுப்போம்


வணக்கம் நண்பர்களே!
                    மறுபிறவி தொடரைப்பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. நமது நண்பர்கள் பலர் இதில் ஆர்வம் அதிகம் என்று எனக்கு தெரியும். பல பேர் போன் செய்து சார் எழுதுங்கள் என்று கேட்டார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நிறைய பிரச்சினைகளை மனிதர்கள் சந்திக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த பிறவி சரியில்லை அடுத்த பிறவியாவது நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடுத்த பிறவியைப்பற்றி ஒவ்வொன்றாக பார்த்துவந்தாலும் இந்த பிறவியில் உங்களுக்கு என்று உள்ள கடமைகளை நீங்கள் செய்து வாருங்கள். பிறருக்கு என்று உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள். இந்த பிறவியே உங்களுக்கு நன்றாக அமையும்.

மக்களிடம் பகிர்ந்து வாழுங்கள் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விட்டது என்று தான் நினைக்கிறேன். உங்களுக்கு அனைவருக்கும் சோதிடம் என்பது தெரியும் அதில் அனைவரும் சம்பாதிக்கமுடியுமா என்று நீங்கள் ஒரு நாள் பார்த்தது உண்டா அதாவது பத்து ஜாதகத்தை எடுத்தால் அதில் ஒரு ஜாதகம் தான் சம்பாதிப்பதற்க்கு என்று பிறந்த ஜாதகமாக இருக்கும்.

பிற ஜாதகங்கள் எல்லாம் வேறு வேலைக்கு என்று பிறந்த ஜாதகமாக தான் இருக்கும். இன்றைய உலகத்தில் அனைவரும் சம்பாதிக்கவேண்டும் என்ற காரணத்தால் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். சம்பந்தமே இல்லாமல் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு காரணம் பகிர்ந்துக்கொடுக்கும் பழக்கம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் மட்டுமே.

ஒருத்தருக்கு நல்ல சம்பாதிக்கும் நிலை வந்தால் அவர் ஒரு பத்து குடும்பத்தை காப்பாற்றலாம். இன்றைய காலத்தில் நூறு பேர்க்கு ஒரு ஆள் சம்பாதிக்கும் நிலையில் இருந்தாலும் அவர் அனைத்தையும் அவர் ஒருவருக்கே என்று வைத்துக்கொள்கிறார்.

ஒருத்தர் சம்பாதித்தால் ஒவ்வொருவரின் தசம கணக்குபடி பத்து சதவீதத்தை ஏழை மக்களுக்கு என்று அல்லது அவர்களின் மதங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஒரு சதவீதம் நாம் கொடுக்கிறோமா என்றால் இல்லை என்ற பதில் தான் வரும்.

பகிர்ந்துக்கொடுக்கும்பொழுது மட்டுமே கடவுள் உங்களின் மேல் கருணையை காட்டுவான். உலகத்தில் இருக்கின்ற அனைத்து சேவிங்ஸ்லும் பணத்தை போடும் மனிதன் புண்ணிய கணக்கில் மட்டும் பணத்தை போடாமல் போன காரணத்தால் இன்று மனிதனுக்கு பல பிரச்சினைகள் உருவாகின்றன. இனிமேலாவது உங்களின் புண்ணிய கணக்கில் பணத்தை போடுங்கள். 

பிறருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள்.அடுத்த பதிவில் மறுபிறவியைப்பற்றி எழுதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: