Followers

Friday, May 9, 2014

தொழில் செய்பவர்களுக்கு


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் என்னுடன் பேசும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்வி எப்படியாவது எங்களை வாழ்வில் உயர்த்திவிடுங்கள் என்று கேட்கிறார்கள். உங்களை உயர்த்தவேண்டும் என்று தான் நான் இவ்வளவும் கற்று உங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதனை பின்பற்றி வருவதற்க்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது.

மாந்தி பூஜைக்கு என்றே பல நண்பர்கள் என்னிடம் கேட்பது உண்டு. அதற்கு பணம் எவ்வளவு சார் என்றும் கேட்கிறார்கள். ஜாதகத்தின் கிரகத்தை மாற்றி உங்களுக்கு வேலை செய்யவேண்டும் என்பது எவ்வளவு ஒரு கடினமான வேலை.

தலை எழுத்தை மாற்றும் வேலை அது. என்னுடன் தொழிலுக்கு என்று இணைந்தவர்களுக்கு அதனை செய்வேன். அதனை செய்வதாக இருந்தாலும் எனக்கு என்று ஒரு கணக்கு இருக்கிறது. அவர்கள் எவ்வளவு நமக்கு பணம் தருகிறார்கள் என்பதைவிட எனது காலம் முழுவதும் அந்த தொழிலில் இருந்து எனக்கு பணம் வருகிறதா என்று பார்த்துவிட்டு தான் செய்வேன்.

தனிநபர் இவ்வளவு தருகிறேன் அதனை செய்யுங்கள் என்று சொல்லுவதை விட நிரம்தரம் என்று வார்த்தையை நம்பி செய்கின்ற வேலை அது. ஒரு சிலருக்கு உடனே செய்வேன். இது தான் செய்து இருக்கிறேன் என்று சொல்லுவது கிடையாது.

நான் எந்த வேலையை செய்தாலும் வெளியில் சொல்லுவது கிடையாது. இந்த வேலை செய்து இருக்கிறேன் என்று சொன்னால் ஊர் முழுவதும் எனக்கு செய்திருக்கிறார் என்று சொல்லிவிடுவார்க்ள் அல்லவா. அதனால் இப்படி செய்வது உண்டு. நல்ல முன்னேற்றம் அதே நேரத்தில் நிரம்தரமான முன்னேற்றத்தை தருவது மட்டுமே தொழிலுக்கு நான் செய்யும் ஆன்மீகம்.

தனிநபர்களுக்கு பொதுவாக யாரும் இந்த வேலையை செய்வதில்லை. செய்கிறேன் என்று சொல்லுவார்கள். அதனை செய்யமாட்டார்கள். ஒவ்வொரு ஆன்மீகவாதியும் தன் நலம் தன் குடும்பத்தின் நலத்திற்க்கு என்று பிறருக்கு செய்யும் மிகப்பெரிய செயல் இது.

தொழில் செய்கிறேன் என்று என்னிடம் வரும்பொழுது அவர்களுக்கு நான் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்டிப்பாக மிகப்பெரிய முன்னேற்றத்தை அவர்களின் வாழ்க்கையில் கொடுக்கும். அதுவும் மிககுறைந்த காலத்தில் கொடுக்கும். அப்படி கொடுக்கும்பொழுது நான் கேட்கும் பணத்தின் அளவும் அதிகம்

இது எல்லாம் கேரளா வேலைகள் அவர்கள் இதனை கற்று தரும்பொழுதே நிறைய விதிகளை வைத்துவிடுவார்கள். அதற்குள் இருந்து தான் நான் செய்யவேண்டும். பணம் இல்லாமல் செய்யகூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிடுவார்கள். அதனால் நான் இப்படி கேட்பது உண்டு.

ஏகப்பட்ட பூஜைகள் இருக்கின்றன அதனை எல்லாம் செய்வது என்றால் அவ்வளவு  சிரமம் ஆனால் அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். வாழ்வில் யாராவது ஒன்றிரண்டு பேர் வருவார்கள். அவர்களுக்கு மட்டும் செய்வது உண்டு.
\

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: