Followers

Sunday, May 4, 2014

காயத்ரி மந்திரம்


ணக்கம் ண்பர்களே!
                    இப்பொழுது நான் காயத்ரி மந்திரப்பயிற்சியை பற்றி அறிவிப்பை வெளியிடவில்லை காரணம் நண்பர்களுக்கு எந்த அளவுக்கு விருப்பம் இருக்கின்றது என்பதை காண்பதற்க்கு தான் இதுவரை யாரும் போன் செய்து கற்று தாருங்கள் என்று கேட்கவில்லை. 

இந்தியாவிற்க்கு ஆன்மீகம் தேவையில்லை என்று நான் எனது நண்பர்களிடம் பலமுறை சொல்லுவேன் அதற்கு காரணம் இவர்களுக்கு அதன் மேல் விருப்பம் கிடையாது. வாழ்க்கையை ஓட்டுவதற்க்கே கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி மோட்சம் மேல் விருப்பம் இருக்கும். 

வாழ்க்கையை நன்றாக வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அதாவது நல்ல வசதி வாய்ப்போடு இருப்பவர்களுக்கு தான் ஆன்மீகம் வசப்படும். என்னை பொருத்தவரை ஆன்மீகவழியில் எப்படி சம்பாதிப்பது என்பதை கற்றுக்கொடுத்தால் போதும் என்று சொல்லுவேன். 

ஆன்மீகத்தை பொறுத்தவரை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் அது யாரும் கூப்பிட்டு வரகூடாது அதுவாகவே வரவேண்டும். உன் தேடுதல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதனை நோக்கி நீயாகவே சென்றுவிடுவாய்.

நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள் ஒரு மந்திரத்தை ஒரு நாள் சொன்னால் அடுத்த நாள் நான் என்ன நினைத்தேனோ அது நடக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். எத்தனை ஜென்மத்தின் பாவங்களை உங்களின் ஆத்மா சுமந்து நிற்கிறது அது ஒரு நாளில் செல்லவேண்டும் என்றால் எப்படி செல்லும். உங்களின் கர்மாவை பொருத்து தான் ஆன்மீகமும். கர்மா பலன்களை குறைப்பதற்க்கு காயத்ரி மந்திரம் உதவும். காயத்ரி மந்திரத்தைப்பற்றி பதிவில் எந்த நாளில் ஆரம்பிக்கலாம் என்று இனி போடமாட்டேன். விரும்பம் அதாவது வெறி இருப்பவர்கள் அவர்களாவே என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Kalairajan said...

அய்யா
உங்கள் கோபம் நியாயமானதுதான்.குரு வாகிய நீங்கள் பதிவு போட்டால் என்னை மாதிரி மாணவர்கள் ஒரு சிலர் காயத்த்ரி மந்திரம் செய்துகொண்டுள்ளோம்.ஆகையால் மந்திரம் பற்றிய பதிவுகளை போடவும்

Lucrative Profiteer said...

Dear Sir,

I am intersted to recite the "Gayathri Japam" could you able to help here to start day and time etc details.


Regards,

Saravanan