Followers

Wednesday, May 28, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பல நண்பர்களே தொழில் மேல் ஆசை வந்துள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு போன் செய்து எனது தொழிலுக்கு உதவுங்கள் என்று கேட்கின்றனர். நல்ல விசயம் இது அதே நேரத்தில் அந்த தொழிலைப்பற்றி நடத்தும் நபர்களுக்கே அதனைப்பற்றிய அறிவு குறைவாக இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

தொழில் செய்பவர்களிடம் நான் கேட்கும் பணம் பத்து சதவீதம். பொதுவாக ஒரு தொழில் என்றாலே பத்து சதவீதம் லாபம் வருவதே மிக கடினமான ஒரு விசயமாக இருக்கும். அதனை நான் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். 

தொழிலுக்கு செய்வது என்பது முதலில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. எப்படி என்றால் ஒரு பூஜை செய்வது என்றால் கேரளாமுறைப்படி குறைந்தது இரண்டு லட்சம் பணம் கேட்பார்கள். இதனை எல்லாம் நான் இவர்களுக்காக செய்யவேண்டும். 

இதனை செய்யும்பொழுது என்னுடைய இடத்தி்ல் நான் செய்கின்ற பூஜைக்கும் அதிக செலவு ஏற்படுகிறது. இதனை எல்லாம் ஜாதககதம்பத்தில் இருந்து வரும் நபர்களுக்கு இலவசமாக செய்துக்கொடுக்கிறேன். இவர்கள் லாபம் பார்த்து எனக்கு பணத்தை தந்தால் தான் எனக்கு பணம் வரும். இவர்கள் வந்த வழியை பார்த்து சென்றுவிட்டால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.

தொழிலுக்கு செய்வது முதலில் எனக்கு பெரிய நஷ்டத்தை தந்தது. இப்பொழுது அளவோடு செய்து வருகிறேன். பெரிய தொழில் அதிபர்களுக்கு மட்டும் நிறைய செய்கிறேன். பெரிய தொழில் அதிபர்கள் என்று வரும்பொழுது அவர்கள் நிறைய பணத்தை தந்துவிடுகிறார்கள்.  ஜாதககதம்பத்தில் வந்த சின்ன தொழில் அதிபர்களால் அந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட முடிவதில்லை. இவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் முன்னேற்றம் ஏற்படுவதற்க்கு கடினமாக இருக்கின்றது.

நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உதவி செய்யும்பொழுது மிகப்பெரிய அளவில் பணம் அவர்களுக்கு கிடைக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே பணத்தை சம்பாதிக்கமுடியும். குறைவாக பணம் வைத்துக்கொண்டு ஆன்மீகவழியில் தொழிலில் சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.நிறைய பணம் போட்டு தொழில் செய்கிறேன் அதனை பல மடங்கு பெருக்கவேண்டும் என்று வாருங்கள். கண்டிப்பாக அதனை செய்து தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: