Followers

Friday, May 9, 2014

சுத்தமே ஆன்மீகம்


ணக்கம் ண்பர்களே!
                    இந்த முறை வெளியூர் சென்று இருந்தபொழுது என்னை சந்தித்த ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அடிக்கடி நீங்கள் குளிப்பீர்களா என்று கேட்டார். ஏன் என்றால் அவர் என்னோடு இருந்த காரணத்தால் அவர் பார்த்து இருக்கிறார்.  

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கவேண்டும். அப்படி குளித்தால் மட்டுமே உடல் சுத்தமாக இருக்கும். உடல் சுத்தமாக இருந்தால் ஆத்மா சுத்தமாக இருக்கும். உடல் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் கூட நீங்கள் குளிக்கவேண்டும். 

இரண்டு முறை குளிக்கும்பொழுது நமது உடலும் அதனோடு சேர்ந்த ஆத்மாவும் சுத்தமாகி புத்துணர்ச்சியோடு விளங்கும்.புத்துணர்ச்சியோடு இருக்கும்பொழுது நீங்கள் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுப்பட்டால் உங்களின் பயிற்சி எளிதில் கைகூடும்.

மூச்சுபயிற்சி செய்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும் அதே நேரத்தில் நீங்கள் குளிக்கவும் வேண்டும். வாரத்திற்க்கு இந்தந்த கிழமையில் எண்ணெய் குளியலைப்பற்றி சொல்லியுள்ளேன் அதனையும் கடைபிடித்து வரவும்.

தங்களின் உடைகளை தாங்களே துவைத்து பயன்படுத்தவேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து துவைக்கவேண்டாம். பல நண்பர்கள் தங்களின் மனைவிகளை துணிதுவைக்கும் எந்திரம்போல் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அப்படி எல்லாம் செய்யாமல் நீங்களே துணிதுவைக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Naan daily 1thadavai than kulippen.en thunikalai en mummy than vash pannuvanga.