Followers

Friday, May 9, 2014

பிரச்சினையில் தவிக்கும் பெண்களுக்கான பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சிலர் என்னிடம் பேசும்பொழுது என்னுடைய அலுவலகத்தில் பிரச்சினை எனது கணவரால் பிரச்சினை அதற்கு என்று ஏதாவது ஒரு பரிகாரத்தை சொல்லுங்கள் என்று பல பெண்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

பெண்களுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது உங்களுக்கு அம்மன் உதவி செய்யவேண்டும். நான் பல பதிவுகளில் அம்மனை நான் சொல்லுவது போல் வழிப்பட்டு வந்தாலும். ஒரு சில பிரச்சினைக்கு அம்மனை நீங்கள் காளியாக தான் வணங்கி வரவேண்டும்.

ஏதாவது ஒரு காளியை செவ்வாய்கிழமை அன்று மனமுருகி நீங்கள் வழிபட்டு வந்தால் உங்களின் பிரச்சினை தீரும். என்ன தான் ஆண்கள் மிகப்பெரிய அளவில் கிரக அமைப்பு அமைந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்தாலும் செவ்வாய்கிழமை அன்று காளியை வணங்கினால் உங்களின் பிரச்சினை உடனே தீர்த்து வைப்பாள்.

உங்களின் வீட்டிற்க்கு அருகில் காளி கோபத்தோடு இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் வேலில் எலுமிச்சை பழத்தை குத்தி வணங்கிவிட்டு வாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்களை எதிர்த்தவர் நிலை என்ன ஆகும் என்று பாருங்கள்.

ஊரை சுற்றம் கணவனுக்கும் இந்த பரிகாரம் வேலை செய்யும். மனைவியை விட்டு வெளியில் சுற்றும் கணவன்கள் திருந்துவதற்க்கு இந்த பரிகாரம் நல்லது. அவர்கள் திருந்தி வருவார்கள். நீங்கள் செய்யும்பொழுது அந்த காளி கோபமாக இருக்கும் கோவிலாக பார்த்து வணங்கிவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.