Followers

Thursday, May 29, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                   நண்பர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டுருந்தார். அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. செவ்வாய் கிரகத்திற்க்கு இரத்ததை தானம் செய்துவிட்டால் செவ்வாயின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாமா என்று கேட்டிருந்தார்.

ஒவ்வொரு கிரகத்தின் பாதிப்புக்கும் அந்தந்த கிரகத்தின் காரத்துவம் உள்ள விசயத்தில் நாம் அக்கறை காட்டினால் அதன் பாதிப்பு ஒரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. அதில் உள்ள அனைத்த பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது.

செவ்வாய்க்கு நீங்கள் இரத்தம் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் ஆனால் உங்களின் இரத்தத்தை எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்ற விதி செவ்வாய்கிரகத்திற்க்கு கடவுள் விதித்திருப்பார். அந்த நேரத்தில் மட்டுமே இரத்தத்தை வாங்க செவ்வாய்கிரகத்திற்க்கு அதிகாரம் இருக்கும். மற்றபடி நாம் நினைத்த நேரத்தில் சென்று இரத்ததை கொடுத்தவிடமுடியாது.

நமக்கு சாவு வருகிறது என்று சோதிடத்தில் தெரிந்தால் நாம் சுடுகாட்டிற்க்கு சென்று படுத்துவிட்டு வந்ததால் நமக்கு சாவு வராது என்று சொல்லிவிடமுடியாது. இது எல்லாம் ஒரு சின்ன நம்பிக்கை அவ்வளவு தானே ஒழிய முற்றிலும் இது தீர்வாக அமையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: