Followers

Monday, June 2, 2014

விரைய தசா பகுதி 19


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாப்பற்றி பார்த்துவருகிறோம். ஒருவர்க்கு பனிரெண்டாவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்து தசா நடத்திவருகிறது. அவருக்கு தூக்கம் என்பது வருவதில்லை. என்னடா இவர் இப்படி சொல்லுகிறார் என்று நினைக்க தோன்றும். உண்மையான செய்தி இது. அவர் எனக்கு தெரிந்த ஒருவர்.

தூக்கம் வரவில்லை என்றால் ஒரு நாளைக்கு  இரண்டு மணி நேரத்திற்க்கு மேல் தூங்கமாட்டார். அந்த தூக்கத்தை கூட அவர் மது அருந்தி வரவழைக்கிறார். அவர் பார்க்காத மருத்துவர்கள் கிடையாது. இதில் என்ன என்றால் அவர் தூங்கவில்லை என்றாலும் அவரின் உடலில் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. இது மருத்துவத்தில் பெரிய விசயமாக இருந்தாலும் அவரின் உடலுக்கு எந்த பிரச்சினையும் வந்தில்லை.

அவரின் ஜாதகத்தை வாங்கி பார்த்தபொழுது அவருக்கு பனிரெண்டாவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்து தசாவை நடத்துக்கிறது. சுக்கிரன் அவருக்கு தூக்கத்தை கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன்.சுக்கிரனுக்கு எந்த பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று சொன்னார். அவருக்கு என்று ஒரு பரிகாரத்தை செய்ய சொல்லியுள்ளேன். 

இதனை நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இப்படியும் மனிதர்கள் இருக்கின்றனர் என்பதை உங்களுக்கு சொல்ல தான் இதனை எழுதுகிறேன். அவர் எனது நண்பர். வயதில் மூத்தவர் அவரைப்பற்றி வெளியில் வேறு ஏதும் சொல்லகூடாது.

பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து தசா நடத்தினால் இப்படியும் பிரச்சினை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தும் அதில் இவருக்கு தூக்க பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Sir,

Once you said, if sukran sits in 12 th house, then their father/grand father could have done something bad for young ladies...what will be solution for this.