Followers

Sunday, June 8, 2014

விரைய தசா பகுதி 22


வணக்கம் நண்பர்களே!
                    திடிர் என்று காமத்தின் மேல் இத்தனை அக்கறை எடுத்துக்கொண்டு எழுதினேன் என்று ஒரு சிந்தனை செய்தால் அப்பொழுது நமக்கு நினைவுக்கு வருகிறது. சோதிடத்தில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது விரைய தசா. இந்த விரைய தசா எனக்கு நடைபெறவில்லை என்றாலும் என்னை எழுதும்பொழுது என்னோடு சேர்ந்த விசயத்தையும் எழுதவிட்டார் கடவுள்.

விரையம் வீட்டை வைத்து தான் நாம் காமத்தைப்பற்றி சோதிடப்பபலனை சொல்லவேண்டும். காமத்தை ஏன் போய் விரையத்தில் சேர்த்து இருக்கிறார்கள் அது நமக்கு லாபம் தானே என்று ஒரு சில நண்பர்களுக்கு நினைப்பு வரும்.

காமத்தில் மட்டுமே எவ்வளவு பெரிய மனிதனையும் கீழே தள்ளி அவனை அசிங்கப்படவைக்கும். சமுதாயத்தில் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அவனை காமத்தில் அவிழ்த்துவிட்டு இன்றும் இல்லாமல் கீழ் தள்ள வைக்கும் ஒரு நிகழ்வு தான் காமம். அதனால் அதனை விரையத்தில் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதாவது மனிதனை மிகவும் கீழ்தரமாக மாற்றும் ஒரு கருவி காமம்.

பெரிய மன்னர்களை கூட தன்னுடைய மனைவியிடம் உறவுக்கொள்ளும்பொழுது தன் உடலை காட்டித்தானே ஆகவேண்டும். அதனால் தான் மனிதனை கீழ்தரமாக மாற்றுவது காமம் என்றேன். அதனை விரைய தசாவில் வைத்திருக்கிறார்கள். ஒழுங்காக இருந்தால் ஒரு ஆள் கூட முடிந்துவிடும். அதாவது தன் மனையியோடு முடிந்துவிடும்.அங்குள்ள கிரகங்கள் எக்குதப்பாக வேலை செய்தால் ஊர் நாறிவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: