Followers

Sunday, June 29, 2014

விரைய தசா பகுதி 29


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி நிறைய பதிவில் எழுதுவதற்க்கு முன்பு இதனைப்பற்றி நான் அதிகம் சிந்தித்தது கிடையாது ஆனால் இப்பொழுது இதற்கு நிறைய விசயங்கள் எனக்குள் வருகிறது. நான் பார்த்த பழைய சோதிட வாடிக்கையாளர்களை எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அவர்களின் ஜாதகங்கள் என்னிடம் இருந்தாலும் அதனை வெளியிடுவது தவறு என்பதால் உங்களுக்கு அதனை பதிவில் தரவில்லை ஆனால் எந்த கிரகங்கள் அவர்களை பலிவாங்கியது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

என்னிடம் ஒருவர் சோதிடம் பார்க்க வந்தார். அவருக்கு குரு மற்றும் சூரியன் இணைந்து விரைய வீட்டில் அமர்ந்து இருந்தது.அவர் ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வந்தார். அவரின் நேரம் என்று தான் சொல்லவேண்டும் அவர் வேலை செய்யும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை இவர் திருடிவிட்டார். பனிரெண்டாவது வீடு திருடையும் காட்டும் ஒரு இடம்.

இவரை திருடவும் வைத்தது. இவர் கையாடல் செய்து நகையை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு சில காலகட்டத்தில் இவர் மாட்டிக்கொண்டார். இவரை கைது செய்துவிட்டார்கள். அத்தோடு இவருக்கு வேலையும் போய்விட்டது.

குரு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து தசாவை நடத்தியதால் தங்கம் மேல் மோகம் ஏற்பட்டு தங்க நகையை திருடிவிட்டார். இவருக்கு அதில் மோகத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தில் மாட்டவைத்தது. சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் அல்லவா. குருவோடு சூரியன் சேர்ந்ததால் இவருக்கு இப்படி நடந்திருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: