Followers

Sunday, June 1, 2014

வக்கிரகிரகம் தரும் பிரச்சினை தீர பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    கோச்சாரப்படி ஒரு கிரகம் வக்கிரம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தால் பாதிப்பு அதிகம் வரும். அதிலும் ராசிநாதன் வக்கிரம்பெற்றால் அதனால் பக்கத்தில் உள்ளவர்களால் அல்லது ஏதாவது ஒரு விதத்தில் உங்களிடம் பிறர் வந்து வம்பு செய்வார்கள்.

பொதுவாக கோச்சார கிரகத்திற்க்கு அதிகபலனை கொடுக்கும் சக்தி கிடையாது என்றாலும் கூட இப்பொழுது எல்லாம் ஒருவருக்கு தசாநாதன் பலனை கொடுப்பதில்லை. தசாநாதன் வீக்காக இருக்கும் மனிதர்களுக்கு கோச்சாரபலனை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும். 

கோச்சாரப்படி ஒருவருக்கு பிரச்சினை தருகின்ற நிலையில் அதாவது வக்கிரம் பெற்ற கிரகத்தால் பிரச்சினை வரும்பொழுது நீங்கள் அந்த கிரகத்திற்க்கு ஒரு பரிகாரம் செய்யவேண்டும்.

எந்த கிரகம் பிரச்சினை தருகின்றதோ அந்த கிரகத்திற்க்கு நவகிரகம் இருக்கும் சந்நிதியில் ஒரு தீபம் ஏற்றிவிட்டு வந்தால் போதும். நவகிரக சந்நிதியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்பது தெரியவில்லை ஆனால் நாம் அங்கு சென்று ஒரு தீபத்தை போட்டால் மட்டுமே அந்த பிரச்சினை தீரும்.

ஒரு முறை அந்த கிரகத்தின் நாளில் சென்று தீபத்தை ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்பொழுது அந்த கோவிலில் கொடிமரம் இருந்தால் தீபம் ஏற்றுங்கள். கண்டிப்பாக பிரச்சினை தீரும். கண்டிப்பாக இந்த பிரச்சினையால் பல பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு இது தான் பிரச்சினை என்று தெரியாது. இனி மேல் எச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: