Followers

Monday, June 16, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

அம்மனை அனுப்பி பிரச்னை தீர்க்கும் அற்புத கடவுளே, பெண்ணால் ஆன்மீகவாதியாகவே மாற முடியாத போது, கடவுளாக எப்படி மாற முடியும்?? மாதவிடாய் இயற்கை. அதிலிருந்து பிறந்த நீங்கள் மஹான் ஆகும்போது , உங்களை உற்பத்தி செய்கின்ற அவளால் மஹாசக்தி ஆக முடியாதா?

நண்பரே இன்னமும் பதிவை நான் முடிக்கவில்லை. நான் முடியாது என்று சொல்லவில்லை. கற்பிக்கும் வழி தவறாக இருக்கின்றது. அதனைப்பற்றி தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதியவுடன் அதனைப்பற்றி நீங்கள் பேசலாம்.

கடவுள் மஹான் என்று ஒரு பொழுதும் நான் சொல்லிக்கொள்ளவில்லை நீங்கள் ஏன் அப்படி அழைக்கின்றீர்கள். இப்படி உங்களைப்போல் உள்ளவர்கள் போலிகளுக்கு கடவுள், மகான் என்று சொல்லி அவன் செலவு செய்யாமல் அவனை விளம்பரப்படுத்திவிடுகிறீர்கள். 

அம்மனை அனுப்பி பிரச்சினையை தீர்க்கும் அற்புத கடவுளே என்று சொல்லியுள்ளீர்கள். நானே கடவுளாக நீங்கள் கேள்வியை அனுப்பியுள்ளீர்கள். நான் கடவுளாக இருக்கும்பொழுது அம்மனை வேற அனுப்பவேண்டுமா?

ஒரு சாமியார் சொல்லுவார் இந்தியனுக்கு கேள்வி கூட கேட்கதெரியாது. அவனுக்கு ஆன்மீகம் தேவையில்லை என்று சொல்லுவார். அந்த வரிசையில் கூடுதலாக நீங்களும் சேருகின்றீர்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: