Followers

Thursday, June 12, 2014

அன்பான அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    ஜாதககதம்பத்தை தமிழ்மொழியை தெரிந்தவர்கள் மட்டும் படித்து அனுபவித்து வந்தனர். நமது நண்பர்கள் என்னிடம் தமிழ்மொழி தெரியாதவர்களுக்கு நாங்கள் படித்து சொல்லிவருகின்றோம் என்று என்னிடம் தெரிவித்தனர். பல நண்பர்கள் கூட என்னிடம் ஜாதககதம்பத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தருகிறோம் என்றும் என்னிடம் கேட்டனர். 

ஒரு நாளைக்கு பல பதிவுகளை நான் கொடுத்துக் கொண்டிருக்கும்பொழுது அடுத்தவர்களுக்கு ஏன் சிரமத்தை கொடுக்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன்.  அனைத்து நண்பர்களிடம் நானே ஏதாவது வழி செய்கிறேன் என்று சொல்லிருந்தேன்.

நான் ஜாதககதம்பம் தொடங்குவதற்க்கு முன்பே பல வெளிநாட்டினர்களோடு நல்ல தொடர்பு இருந்து வந்தது. அவர்களிடம் நான் பழகியிருக்கிறேன். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள் அப்பொழுதே ஆன்மீகத்தைப்பற்றி நிறைய சந்தேகங்களை எல்லாம் கேட்பார்கள். அவர்களிடம் சொன்ன விசயங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன்.

வெளிநாட்டினர் ஆன்மீகத்தின் மீது நிறைய ஈடுபாடு இருக்கும். நமது ஆன்மீகத்தின் மீது தனிஈடுபாடு கொண்டவர்கள் அவர்களிடம் நான் செய்த உரையாடல் மற்றும் எனது சொந்த ஆன்மீக அனுபவங்களை எல்லாம் ஆங்கிலத்தில் தனிபதிவாக தற்பொழுது வர போகின்றது. வரபோகின்றதை விட தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன். Trial நடந்துக்கொண்டு இருக்கிறது.

ஆங்கிலப்பதிவில் ஆன்மீகம் மட்டும் வெளியிட இருக்கிறேன். சோதிடத்தை தற்பொழுது அதில் வெளியிட வேண்டாம் நேரம் வரும்பொழுது அதனை வெளியிடுவோம் என்று இருக்கிறேன்.

ஜாதககதம்பத்தில் இருக்கும் கருத்துக்கள் அதில் இருக்காது. வெளிநாட்டினர்களுக்காக அது எழுதப்பட்ட விசயங்கள் அதனால் ஜாதககதம்பத்தில் உள்ள விசயங்கள் அதிகபட்சம் வராது. அனைத்து வேலையும் முடிந்த பிறகு உங்களுக்கு அதன் முகவரியை தருகிறேன். விருப்பம் இருப்பவர்கள் அதனை படித்துக்கொள்ளலாம்.

உங்களிடம் சொல்லவேண்டிய ஒரு முக்கிய செய்தி ஒன்று அதனை சொல்லிவிடுகிறேன். எனது கல்வி தகுதி பள்ளிப்படிப்பு வரையில் தான். A B C D கூட்டி படித்து எனக்கு தெரிந்த இங்கிலீஸ் யை வைத்து எழுதும் பதிவுகள் அது. வெளிநாட்டினர் அதனை புரிந்துக்கொள்வார்கள். நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு தவறு என்று பட்டால் என்னிடம் தெரிவித்தால் என்னையும் திருத்திக்கொண்டு பதிவையும் திருத்தமுடியும்.

அம்மன் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஆரம்பித்துவிட்டேன். அனைத்தையும் அது பார்த்துக்கொள்ளும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Ungal nalla manadhirku anaithum nanraaka varum sir.

V.C.Arunchand said...

இது ஒரு நல்ல தொடக்கம் ,வாழ்த்துகள் .