Followers

Friday, June 13, 2014

குரு பெயர்ச்சி


வணக்கம் நண்பர்களே
                    ஒரு சில நண்பர்கள் சார் குருப்பெயர்ச்சி வருகிறது அதனைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டனர். இன்றைய காலத்தில் மக்கள் கோச்சாரப்பலனுக்கு அதிக முக்கியதுவம் தருகிறார்கள். கோச்சாரப்பலன்கள் ஒரளவு மட்டுமே பலனை தரும். உங்களுக்கு முழுப்பலனையும் தருவது தசாப்பலன்கள் மட்டுமே.

தசாநாதன் சரியில்லை என்றால் கோச்சாரப்பலன்கள் உங்களுக்கு பலன் தரும். கோச்சாரப் பலன்களைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம். நல்லது செய்தாலும் தீயது செய்தாலும் அதிக காலத்திற்க்கு இது இருக்கபோவதில்லை. கொஞ்ச நாளில் அடுத்த இடத்திற்க்கு சென்றுவிடும்.

குரு பலனை நமது கோச்சாரப்பலன்கள் என்று குருவைப்பற்றி பழைய பதிவில் எழுதியுள்ளேன். அதனை தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பொதுவான பலன்களாக அது இருக்கும். 

குரு கிரகம் கெடுதல் தருவது போல் இருந்தால் குருவிற்க்காக நவகிரகத்தில் அல்லது தெஷ்ணாமூர்த்தி சந்நிதியில் ஒன்பது வாரம் தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள். குருவால் ஏற்பட்ட பிரச்சினை தீரும்.

குரு கெடுதல் தரும் நிலையில் உள்ள ஜாதகர்கள் மட்டும் வழிபாட்டாலும் நல்ல நிலையில் இருப்பவர்களும் உங்களுக்கு கூடுதல் நற்பலனை வழங்கும். இந்த மாதத்திற்க்கு குரு பகவான் சந்நிதி சென்று வழிப்பட்டு வருவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: