Followers

Sunday, June 15, 2014

மூலிகை குளியல் பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் நிறைய பரிகாரம் சொன்னாலும் ஒரு சில விசயங்களை சொல்ல மறந்துவிட்டேன். நான் முதன் முதலில் இதனை கற்றுக்கொள்ளும்பொழுது அதாவது பரிகாரம் செய்யவதற்க்கு முன் ஒரு சில விசயங்களை கவனமாக கவனித்தேன்.

ஒவ்வொருவரின் உடலில் நரம்புகள் வழியாக பிரச்சினை வருகிறது என்று கண்டுபிடித்தேன். பெரும்பாலும் நரம்புகளில் கிரகங்களின் வேலைகள் அதிகம் காட்டுகிறது என்ற உண்மை தெரியவந்தது. நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்பொழுது இவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. நரம்புகள் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அந்த நரம்புகளில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

வாடிக்கையாளர்களை முதலில் நல்லெண்ணெய் கொடுத்து நன்றாக தேய்த்து குளித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். அவர்கள் குளித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு பரிகார பூஜைகளை செய்வேன். ஒரு சிலர் பூஜையின் பொழுது தூங்கிவிடுவதும் உண்டு. அவர்களுக்கு ஒரு புது பிறப்புபோல் இருக்கும்.

இப்பொழுது யாருக்கும் பரிகாரபூஜை செய்ய போவதில்லை. நரம்புகளை வலுப்படுத்த வேண்டும். நரம்புகள் நன்றாக இருந்தால் ஒவ்வொரு மனிதனும் நன்றாக இருப்பான். எப்படிப்பட்ட தோஷமும் அவனை தாக்காது.

இப்பொழுது இந்த ஆராய்ச்சியில் புதுவிதமான மூலிகை தைலம் தயாரிக்க ஒரு யோசனை இருக்கிறது. மூலிகை தைலம் தயாரித்தவுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன் வாங்கி பயன்படுத்தி பாருங்கள். வெள்ளிக்கிழமை தைலக்குளியல் பற்றி சொல்லி உள்ளேன் அல்லவா. அதற்கும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: