Followers

Friday, June 20, 2014

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    கேள்வி பதில் பதிவைப்படித்துவிட்டு பல தரப்பட்ட நண்பர்களிடம் இருந்து கருத்துக்கள் வந்தன. போன் செய்தும் பேசினார்கள். அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் உங்களின் தந்தை மற்றும் தாயால் பிறந்து இருக்கிறீர்கள். இருவருக்கும் தான் முதல் கடமைபட்டு இருக்கின்றீர்கள். நீங்கள் பிறந்தர்க்கு நான் ஒரு போதும் காரணம் கிடையாது. இடையில் நான் இந்த பதிவின் வழியாக உங்களை தொடர்புக்கொள்கிறேன். 

நான் எழுதிக்கொண்டே இருப்பேன் அது எனது வேலை. எது உங்களுக்கு நல்லதாகபடுகிறதோ அதனை கடைபிடிக்கலாம். அதனை வைத்து நீங்கள் முன்னேற்ற பாதையில் சென்றால் சரி.

எங்களைப்போல் உள்ளவர்கள் சொல்லிக்கொண்டே இருப்போம். எங்களின் கருத்துகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை. உங்களுக்கு எது சரியாகபடுகிறதோ அதனை எடுத்துக்கொள்ளவும். என்னைப்பொறுத்தவரை அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வேன். நீங்கள் ஒரு நல்ல கருத்தை எனக்கு சொன்னால் அதன் வழியாக எனக்கு என்ன கிடைக்கும் என்பதை தான் யோசிப்பேன். எனக்கு லாபம் வருவது போல் இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்வது எனக்கு பிடிக்கும். அது நல்லதா கெட்டதா என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதா படுகிறதோ அதனை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் ஆன்மீகவாதிகள் அதனை செய்தே என்று சொல்லிக்கொண்டு அவர்கள் அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள். உங்களின் மனதிற்க்கு எது நல்லதாக படுகிறதே அதனை அனுபவியுங்கள். ஆன்மீகத்தில் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு உங்களின் வாழ்க்கையை நன்றாக வாழபாருங்கள்.

வாழ்க்கை  கொஞ்சம் காலம் தான் அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ள பாருங்கள். பிறந்தது போல் இருக்கும் திரும்பி பார்த்தால் இறப்பு வந்து முன்னடி நிற்க்கும்.

திருப்பூரில் இருக்கிறேன். இந்த பகுதியில் இருக்கும் நமது நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: