Followers

Sunday, June 22, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு நாட்களாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதி நண்பர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஜாதககதம்பத்தில் உள்ளவற்றை பின்பற்றி வருவதால் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று சொல்லும்பொழுது கேட்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இரண்டு நாட்களாக பதிவுகள் வரவில்லை என்று பல நண்பர்கள் எனக்கு போன் செய்து ஏன் பதிவு வரவில்லை என்று கேட்டார்கள். அவர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அந்தளவுக்கு ஆன்மீக மற்றும் சோதிட தாகம் இருக்கின்றது என்பது தெரிகிறது.

சென்ற இடங்கள் எல்லாம் அம்மனை பற்றி நிறைய தகவல்களை சொன்னார்கள். அவர்களின் வாழ்க்கையில் எப்படி அம்மன் நல்லது செய்தது என்பதை எல்லாம் சொன்னார்கள். அதனை எல்லாம் பதிவில் எழுதினால் மிக சுவாராசியமாக இருக்கும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கும்பொழுது அதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

எத்தனையோ பேர் ஆன்மீகத்தில் அம்மனால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. உங்களின் எந்த பிரச்சினைக்கும் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்க்கும் ஒரு நல்ல வழியை அம்மன் காட்டும். எங்களுக்கும் ஆன்மீகம் வருமா என்று நினைத்துக்கொண்டு இருந்தோம் இப்பொழுது இத்தனை நாட்கள் வீணடித்துவிட்டோம் என்று நினைக்கும்பொழுது ஒரு கவலை ஏற்படுகிறது என்று சொன்னார்கள். அனைத்திற்க்கும் அம்மன் தான் காரணம். அம்மனை நம்பினால் உங்களுக்கு எந்த காலத்திலும் பிரச்சினை இல்லை என்று தெரிகிறது.

அமாவாசை அன்று அம்மனுக்கு பூஜை நடைபெறும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: