Followers

Tuesday, June 24, 2014

ஆண்கள் மட்டும் படிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீகத்தைப்பற்றி நிறைய பதிவுகள் மற்றும் சோதிடத்தைப்பற்றி நிறைய பதிவுகளை இத்தனை வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதனைப்பற்றி எல்லாம் எனக்கு கேள்வி கேட்காதவர்கள் ஒரு பதிவுக்கு மட்டும் அதிகமான மெயில் எனக்கு அனுப்பிக்கொண்டே வந்தார்கள் நானும் எல்லோரும் சின்னவர்கள் தானே அதனால் அதில் ஈடுபாட்டை காட்டவில்லை.

சமீப காலமாக பெரியவர்களும் அதில் மிகுந்த ஈடுபாட்டை காட்ட ஆரம்பித்தவுடன் அதில் ஏதோ விசயம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டே வந்தேன். நாளுக்கு நாள் இது தொல்லையாகவே மாறிவிட்டது. முதியவர்கள் வரை இதனை கேட்ட என்னை தொந்தரவு செய்கின்றனர். அப்படி என்ன என்று கேட்கிறீர்களா

ஒரு மந்திரம் இருக்கின்றது. அதனை பின்பற்றினால் உங்களுக்கு உடல்உறவில் அதிக நேரம் இருக்கமுடியும் என்று சொல்லிருந்தேன். அதனை கேட்டு தான் தொந்தரவு.

சரி நாம் இதனைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதிவிட்டால் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று எழுதிவிடுகிறேன்.

மந்திரத்தை மட்டும் சொல்லிவிட்டால் ஒன்றும் நடக்காது அந்தளவுக்கு நமது உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடலில் சக்தி இல்லை என்றால் உடல் கொஞ்சநாளில் படுத்துவிடும். முதலில் இன்றைய இளைஞர்களுக்கு உடல் வலிமை என்பது குறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கு முதல் காரணம் அரசாங்கம் தானே தவிர வேறு யாரையும் நாம் குற்றம் சொல்லமுடியாது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று சொன்னால் யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை அதற்கு அரசாங்கம் செய்து வினை தான் இளைஞர்களை பலி வாங்கியது. என்னடா புது கதையை விடுகிறார் என்று நினைக்கலாம். படியுங்கள் உண்மை புரியும்.

இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகளை விட்டது முதல் தவறாக நாம் சொல்லலாம். நாம் உண்ணும் உணவு அனைத்தும் விஷம் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இயற்கையாக விளையும் பொருட்களை பாக்கெட் செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனை வாங்கிய மக்கள் அனைவருக்கும் இப்பொழுது நாளுக்கு நாள் புது புது வியாதிகள் வந்துக்கொண்டே இருக்கின்றது. பாக்கெட் போடும்பொழுது கண்டிப்பாக அது கெடாமல் இருக்க கெமிக்கலை சேர்த்து தான் ஆக வேண்டும். அது நமது உடலுக்கு பிரச்சினையை கொடுக்கிறது.

பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார்கள் அதனை மக்கள் வாங்கி பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். இயற்கையாகவே விளையும் பொருட்களை நீங்கள் வாங்கி பயன்படுத்த தொடங்கினால் உங்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும்.

உடலறவுக்கு உங்களின் உடல் மிக வலிமையாக இருக்கவேண்டும். நாம் சாப்பிடும் உணவு முறையை முதலில் மாற்றவேண்டும். அனைத்தையும் இயற்கையாகவே வாங்கி பயன்படுத்த வேண்டும். என்னோடு தொழில் தொடர்பு வைத்திருக்கும் குடும்பங்கள் அனைத்தும் இன்றைய நாளில் இயற்கை உணவு பழக்கத்திற்க்கு மாறிவிட்டார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே நான் நன்றாக இருக்கமுடியும் என்று நான் பல கண்டிஷனை போட்டுவைத்திருக்கிறேன்.

பாக்கெட் உணவுகளை வாங்குவதற்க்கு உபயோகம் செய்தால் உங்களின் உடலில் சக்தி சேராது. தேவையற்ற கொழுப்பு சேரும். உடலறவுக்கு சக்தி இருந்தால் தானே நன்றாக செய்யமுடியும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலில் சக்தி இல்லாமல் இருக்கின்றனர். முதலில் நீங்கள் இயற்கையான உணவு முறைக்கு மாறுங்கள்.

எந்த ஒரு கம்பெனி பொருட்களையும் வாங்ககூடாது. அதனை வாங்கி நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களின் மனைவியை திருப்திப்படுத்தமுடியாது. சமையல் பொருட்களில் முடிந்தளவு இயற்கையாகவே இருக்க பாருங்கள். அடுத்ததாக அரிசி விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கைக்குத்தல் அரிசி மிகவும் நல்லது.

வெளியில் சாப்பிடாதீர்கள். உணவங்களில் சாப்பாட்டை குறைத்தாலே போதும் உங்களின் உடல் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் உங்களின் பணமும் சேமிக்கமுடியும். நான் வெளியில் சென்றால் எனது தொழில் வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் எனக்கு உணவு வரும். நானே கேட்பேன் ஏன் அப்படி கேட்கிறேன் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட உணவை தயாரித்து உண்கிறார்கள் என்று பார்ப்பதற்க்கு நானே கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.

முதலாக உங்களுக்கு நான் செய்யும் உதவி உங்களின் உணவு பழக்கத்தை இயற்கையாக வைத்துக்கொண்டால் உங்களின் இல்லறம் செழிக்கும். நான் இதற்க்காகவே ஒவ்வொரு நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறேன். நான் வந்து பார்த்தால் உங்களின் நிலை என்ன என்று தெரிந்துவிடும்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் குழந்தை இல்லை என்று வந்தார். வா உடனே உங்களின் வீட்டிற்க்கு போகலாம் என்றேன். அவரும் அழைத்துக்கொண்டு சென்றார். நேராக அவரின் வீட்டின் சமையறைக்கு சென்றேன். அங்கு பார்த்தால் உலகத்தில் உள்ள மசாலா மற்றும் அரிசி அனைத்தும் கம்பெனி பிராண்டாக இருக்கிறது. உடனே அவரிடம் இதனை எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஆறு மாதத்திற்க்கு இயற்கையாகவே வாங்கி சாப்பிடு உனக்கு குழந்தை இருக்கும் அப்படி இல்லை என்றால் அதன் பிறகு அம்மனை வைத்து வேண்டுதல் செய்யலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவரும் நான் சொன்ன விசயத்தை கடைபிடித்துவந்தார். சரியாக அதுவாகவே நான்கு மாதத்திற்க்கு பிறகு குழந்தை உருவாகிவிட்டது. இயற்கையாகவே உணவை உண்டால் உங்களுக்கு குழந்தையும் இருக்கும். உங்களால் இல்லறத்திலும் திருப்தியாக இருக்கமுடியும். முதல் கருத்தாக இதனை சொல்லிருக்கிறேன்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

ஆமாம் இது நல்ல விசயம் தானே பிறகு எதற்கு ஆண்கள் மட்டும் படிக்கவும் என்று போட்டுள்ளீர்கள் என்று கேட்க தோன்றுகிறதா ஒன்றும் இல்லை. இன்று நமது ஜாதககதம்பம் ஹிட்ஸ் பிச்சிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: