Followers

Wednesday, June 25, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவருக்கும் தினமும் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் பிரச்சினையை தீர்க்க பரிகாரம் செய்யமுடியாது. ஏதாே ஒரு சக்தியை நாம் தினமும் வழிப்பட்டு வரும்பொழுது நாம் அந்த பிரச்சினையில் இருந்து விடுபடமுடியும். 

என்னிடம் ஜாதகத்தை அனுப்பியவுடன் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஒரு சிலருக்கு பூர்வபுண்ணியப்பலன் அதிகமாக இருக்கும் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும்பொழுது அம்மன் அதுவாகவே நடத்திக்கொடுத்துவிடும். 

ஒரு சிலருக்கு பூர்வுபுண்ணியப்பலன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது. ஒரு சில பரிகாரங்களை செய்ய சொல்லுவது உண்டு. அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு பிரச்சினை போய்விடும்.

தினமும் அளவுக்கு அதிகமாக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கின்றது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு வழிப்பாட்டு முறையை பின்பற்றி வரவேண்டும்.

நமது தளத்தின் வழியாக காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்களும் இருக்கின்றார்கள். காயத்ரி மந்திரம் செய்யவேண்டாம் ஏதாவது ஒரு குரு வழியாக மந்திரப்பயிற்சி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த குருவின் வழிகாட்டுதல்படி மந்திரப்பயிற்சி செய்து வரலாம்.

மனிதனின் ஒவ்வொரு பிரச்சினையைும் தீர்ப்பது அவர்களின் குலதெய்வத்திற்க்கு பிறகு தான். குலதெய்வத்தின் படி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறேன் என்று நினைப்பவர்கள் அவர்களின் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதல் செய்து வழிப்பட்டு வரலாம்.

என்னிடம் வந்த பிறகு உங்களுக்கு நன்மை நடைபெறுகிறது என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அம்மன் செய்யும் வேலை தானே தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. அம்மனிடம் நீங்கள் சரணாகதி அடைந்துவிடவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: