Followers

Tuesday, June 3, 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                    பச்சை பரப்புதலை பல நண்பர்கள் செய்து வருகின்றனர். ஒரு நாளில் உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும் என்று மட்டும் கனவு காணவேண்டாம். நமது குலதெய்வத்தின் தற்பொழுது உள்ள நிலை என்ன என்று தெரியாது.

பல இடத்தில் குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்தே பல வருடங்கள் இருக்கும். வழிபாடு செய்யாமல் இருக்கும்பொழுது அந்த குலதெய்வத்தினால் உடனே பலனை கொடுத்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு என்று வருடத்திற்க்கு ஒரு முறையாது பூஜை செய்திருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த குலதெய்வத்தின் அருள் உடனே கிடைக்கும்.

நமது வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வரும்பொழுது மட்டுமே அந்த தெய்வம் மனமிரங்கி நமக்கு நல்லது செய்யும். இத்தனை நாள் நாம் எதனையும் செய்யாமல் இருந்து வந்திருக்கிறோம். ஒரு நாள் செய்வதால் உடனே நம்மிடம் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு.

ஒரு மனிதரிடம் ஒரு காரியம் நடைபெறவேண்டும் என்றால் நாம் அந்த மனிதரை தொடர்ச்சியாக சென்று பார்த்து வருகிறோம் அல்லவா. அதைப்போல் தான் தெய்வங்களும். நல்ல நிலையில் இருந்தால் நாம் அந்த பக்கமே செல்லமாட்டோம். நமக்கு பிரச்சினை எனறு வருவதால் மட்டுமே அந்த பக்கம் செல்லுகிறோம். தொடர்ச்சியாக செய்து வாருங்கள். உங்களின் வேண்டுதல் கண்டிப்பாக நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: