Followers

Monday, June 30, 2014

பித்ரு தோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    பித்ரு தோஷத்தைப்பற்றி நான் நிறைய சொல்லிருந்தாலும் மறுபடியும் சொல்லவேண்டும் என்று நேற்று நினைத்து இருந்தேன். காலையில் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இன்று எப்படியும் இதனைப்பற்றி எழுதிவிடவேண்டும் முடிவுடன் உழவன் எக்ஸ்பிரஸில் அமர்ந்து எழுதிக்கொண்டுள்ளேன்.

ஒருவருக்கு இருக்கின்ற தோஷத்தில் மிகவும் கொடியது எது என்றால் அது பித்ருதோஷம் என்று அடிதது சொல்லலாம். அந்தளவுக்கு கொடியது பித்ரு தோஷம். இது முன்ஜென்மத்தால் ஏற்பட்டது என்று சொல்லுவதும் உண்மையாக இருக்கின்றது.

பித்ருதோஷத்தைப் பொறுத்தவரை ஒருவர் எந்த செயலை தொடங்கினாலும் அதில் அதிகமாக தடையை ஏற்படுத்தி அந்த காரியத்தை நடத்தவிடாமல் செய்வதில் பித்ருதோஷத்தை அடித்துக்கொள்ளமுடியாது.

ஒரு செயலை நடத்தவிடாமல் செய்வதற்க்கு காரணம் அதன் பின்புலத்தில் ஒரு ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா இவரை பின் தொடர்ந்து வருவதால் அனைத்து காரியத்தையும் தடைசெய்கிறது. இதற்கு நான் இராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்ய சொல்லி இருந்தேன். 

இதற்கு நிரந்தர தீர்வு என்றால் அந்த ஆத்மாவை நாம் எடுத்துவிடுவது மட்டுமே. ஆத்மாவை கையாள தெரிந்தவர்கள் மட்டுமே இதனை செய்யமுடியும். ஆத்மாவை எடுத்து அதற்கு சாந்தி பரிகாரத்தை செய்வார்கள். அவர்களை தொடர்புக்கொண்டு எனக்கு இப்படி பிரச்சினை இருக்கிறது இதனை செய்துக்கொடுங்கள் என்று சொன்னால் அவர்கள் செய்து தருவார்கள்.

நான் எனது தொழில் வாடிக்கையாளருக்கு செய்துகொடுப்பது வழக்கம். ஒரு சில ஜாதககதம்ப நண்பர்களுக்கு செய்து கொடுத்து இருக்கிறேன். இதில் செலவு எதுவும் இல்லை. ஆத்மாவை எடுப்பது எனக்கு எளிதான காரியம். எனது வருமானத்திற்க்காக நிறைய பணம் வாங்குவது வழக்கம். 

ஒரு சிலர் என்னிடம் வந்து எனக்கு இதனை எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டு செய்துக்கொடுத்தேன். எனக்கு நல்லது நடந்த பிறகு பணம் தருகிறேன் என்று சொன்னார்கள். பல பேர் அப்படியே ஒடிவிட்டார்கள். அப்புறம் அந்த ஆத்மாவை நான் என்ன செய்யமுடியும் திரும்பி அவர்களிடம் அனுப்பு தான் முடியும். 

இந்த பித்ருதோஷத்தை எடுக்காமல் எந்த ஒரு காரியத்தையும் உங்களால் செய்யவே முடியாது. பொதுவாக இந்த தோஷம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெஜாரிட்டியாக ஒரு சாதி இருக்கும் அல்லவா. அந்த சாதி மக்களுக்கு இது அதிகமாக இருக்கின்றது. இவர்கள் சும்மா இருப்பதில்லை எங்கு கீழ் சாதியில் மக்கள் இருக்கின்றார்களோ அவர்களை இவர்கள் தாக்குவது. அதனால் தான் இவர்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது. 

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற சாதியில் உள்ளவர்களுக்கு இந்த பித்ரு தோஷம் அதிகமாக இருக்கும். நான் பார்த்தவரையில் இவர்களின் ஜாதங்களில் முக்கால்வாசி இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்ட இருக்கின்றது.

சாதியை பற்றி சொன்னதால் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். உண்மையான விசயம் இது நீங்கள் வேண்டுமானால் சோதனை செய்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment: