Followers

Tuesday, June 3, 2014

சோதிட அடிமைகள்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு என்ன நடந்தது என்பதை நான் அனுபவித்த விசயங்களை ஜாதககதம்பத்தில் கொடுத்துவிடுவேன். பெரும்பாலும் உள்ளது உள்ளபடியே அப்படியே தந்துவிடுகிறேன். அதிகப்பட்சம் எதுவும் மறைப்பதில்லை.  அப்படி கொடுக்கும் கருத்துகளை நீங்கள் பின்பற்றினால் அதில் இருந்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும்.

உங்களின் வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்க்கு என்ன என்ன வழிகள் இருக்கின்றனோ அதனை தந்துவிடுவேன். அதனை எடுத்துக்கொண்டு செயல்படுத்தி பார்க்கவேண்டும். நான் சொல்லுவது போல் நீங்கள் படித்துவிட்டு சென்றால் ஒன்றும் நடக்கப்போவது கிடையாது. செயலில் இறங்கவேண்டும்.

சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி தானே தவிர அதனை வைத்துக்கொண்டு நீங்கள் இருந்துவிட்டால் உங்களால் அடுத்த எல்லையை தொடமுடியாது. பல பேர்கள் இப்படி இருக்கிறார்கள் கிரகங்களை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

ஏதாவது ஒரு கிரகத்தின் தசா வரும் அதன் வழியாக நாம் நன்றாக இருப்போம் என்று காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இருக்கின்ற தசாவில் என்ன செய்து நாம் முன்னேற்றம் அடையலாம் என்று பார்க்கவும். பொதுவாக அனைத்திற்க்கும் பரிகாரத்தை சொல்லி இருப்பேன். அதனையாவது நீங்கள் பின்பற்றி அதில் இருந்து தப்பி நீங்கள் முன்னேற்றம் அடையவேண்டும். 

ஒரு சிலர் நன்றாக சோதிடத்தை படித்துக்கொண்டு அதிலே அந்த கிரகம் சரியில்லை இந்த கிரகம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் இவர்களிடம் நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் வாருங்கள் என்று அவர்களை கூப்பிட்டால் கூட வருவதில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் சோதிடத்திற்க்கு அவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்பது புரிகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: