Followers

Wednesday, June 4, 2014

மனமார்ந்த நன்றி


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு ஆன்மீகத்தை கற்றுதரும் இடத்தில் எங்களிடம் வாருங்கள் என்று கூவி கூவி அழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் அங்கு எல்லாம் மக்கள் அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. ஒரு பிளாக்கை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் நான் வருகிறேன் என்று பல நண்பர்கள் எனக்கு மெயில் அனுப்புவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

ஆன்மீகத்திற்க்காக தனியாக வகுப்பு எல்லாம் எடுத்து உங்களுக்கு சொல்லிதரவேண்டியதில்லை. நீங்களாகவே வீட்டில் கற்றுக்கொள்ளமுடியும். ஆசிரமத்தில் என்ன பெரியதாக எடுத்துவிட போகின்றார்கள். மூச்சு பயிற்சி யோகா மற்றும் தியானம் இதனை தான் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள் இதனை எல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கி நீங்களாவே கற்றுக்கொள்ளமுடியும். பொதுவாக ஒரு நூலில் இருந்து தான் அனைத்தையும் எடுத்து இருப்பார்கள்.

பிறரிடம் நீங்கள் சென்றுக்கொண்டாலும் நல்லது தான். அதிக விலை இல்லாமல் கற்றுக்கொள்வது நல்லது. நல்ல குருவாக பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.என்னிடம் ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டாம். நான் என்ன என்ன தரவேண்டும் என்று நினைக்கிறேனோ அதனை ஜாதககதம்பத்தில் கொடுத்துவிடுகிறேன். அதனை படித்தே நீங்கள் பின்பற்றி வரமுடியும். 

ஜாதககதம்பத்தில் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன் அதனை நீங்கள் எடுத்துக்கொண்டு பின்பற்றினால் போதும். நீங்கள் உங்களின் ஊரில் இருந்தே இதனை செய்துக்கொள்ளமுடியும். உங்களை எல்லாம் தனியாக ஒரு இடத்தில் வரவழைத்து உங்களுக்கு கற்று தருகிறேன் என்று சொன்னால் உங்களின் நேரம் வீணாகபோய்விடும்.

உங்களின் நேரத்தை நான் எந்தவிதத்திலும் பாதிப்பதை ஏற்படுத்திவிடகூடாது. உங்களின் வீட்டில் இருந்தே அனைத்தையும் பின்பற்றி உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள்.

உங்களிடம் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்ற வெறி இருந்தால் உங்களின் ஆத்மா அதுவாகவே மாறமுயற்சி எடுக்கும். அனைத்தையும் எப்படியும் கற்றுக்கொண்டுவிடும். அதுவே தேடி உங்களிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Thodarattum ungal aanmega sevai

Unknown said...

yes you are correct most of the high tech ashram tells follow their
books yoga and pranayama no one tells or teach the real one i like
your word i will once again thanks for your guru who teach the real fact and the truth for you
sampathkumar s
sampathkumarsres@gmail.com