Followers

Thursday, June 5, 2014

மாந்தி என்ற மாயஉலகம்


வணக்கம் நண்பர்களே!
                    மாந்தியைப்பற்றி தகவல்களை சொல்லமாட்டேன்கிறீர்களே அதனைப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். பொதுவாக எதனை வைத்து தொழில் செய்கிறோம் என்பதை வெளியில் சொல்லுவது கிடையாது. தொழிலுக்கும் உகந்தது கிடையாது அல்லவா அதனால் அடிக்கடி சொல்லுவது கிடையாது.

ஒரு மனிதனின் விதியை மாற்றி எழுதும் வேலையை செய்கிறோம் என்றால் அது அந்தளவுக்கு எளிதில் கிடைத்துவிடகூடிய ஒன்றா என்று நீங்கள் நினைத்து பாருங்கள். மாந்தியை வைத்து விதி மாற்ற முடியும். எனக்கு நெருங்கிய வட்டாரத்திற்க்கு மட்டும் இதனை வைத்து செய்துக்கொடுத்திருக்கிறேன். அதுவும் ஒன்று இரண்டு பேர் பேர்களுக்கு மட்டுமே. 

மாந்தியை வைத்து தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் எனக்கு கண்டிப்பாக தெரியாது. மாந்தியை வைத்து இவர்கள் பலனை தான் சொல்லுகின்றார்கள். பலனை சொல்ல தேவையில்லை. பிரச்சினையை தீர்க்க மாந்தியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாந்தியை வைத்து கிரகங்களை மாற்றும் வழியை செய்யமுடியும். இது செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு வேலை. அந்த வேலையை ஒருத்தருக்கு செய்கிறோம் என்றால் அந்த நபர் எங்களுக்கு எந்தளவுக்கு செய்திருப்பார்கள் அல்லது நெருங்கி இருப்பார்கள் என்று பாருங்கள்.

மாந்திக்கு கீழ் அனைத்து ஆத்மாக்களும் இருக்கும். அந்த ஆத்மாக்களை வைத்து நிறைய செய்வதும் உண்டு. ஒரு சிலர் பணக்காரர் ஆகவேண்டும். என்று நினைப்பார்கள் அவர்களுக்கு ஏதாவது இறந்த பணக்காரனின் ஆத்மாவை கூப்பிட்டு அவனுக்கு உதவ செய்வார்கள். அவனும் பணக்காரர்களாக மாறிவிடுவார்கள். 

மாந்தி என்பது ஒரு மாயஉலகம் தான் அதனை வைத்து வேலை செய்யவேண்டும் என்றால் நாமும் மாயக்காரனாக இருக்கவேண்டும். எல்லாம் கஷ்டமான வேலை எதற்கும் தயாராக இருப்பனுக்கு எளிதான வேலை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: