Followers

Monday, June 23, 2014

பாவத்தை சேர்த்த வழி


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்திக்க ஒரு நபர் வந்திருந்தார். அவரின் மகனுக்கு திருமணம் அமையவில்லை. நிறைய வரன்களை பார்த்தும் ஒன்றும் அமையவில்லை என்று அவரின் மகனின் ஜாதகத்தை காண்பித்தார்.

அவர் மகனின் ஜாதகத்தை பார்த்தபொழுது பெரிய தோஷம் ஒன்றும் கிடையாது. அவரும் என்னிடம் சார் நான் எந்த பாவத்தையும் செய்ததில்லை. கடவுள் பக்தியோடு இருக்கிறேன் என்று சொன்னார்.

ஆண்டவன் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை இதில் மட்டும் எனக்கு குறை வைத்துவிடுவார் போல் இருக்கிறது என்றார். பல வருடங்களாக பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

அவரிடம் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். எனது தந்தை சிட்டியில் பல இடங்களை வாங்கி போட்டு சென்று இருந்தார். அந்த இடங்களில் எல்லாம் நான் வீடு மற்றும் கடையை கட்டி வாடகைக்கு விட்டுருக்கிறேன். பண விசயத்தில் எனக்கு குறை இல்லை என்பதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை என்றார்.

அவரிடம் நீங்கள் கட்டிய வீடு மற்றும் கடைகளில் வாடகைக்கு விடுபவர்களிடம் மின்சாரக்கட்டணம் அரசு நிர்ணித்த தொகையை தான் வாங்குகிறீர்களாக என்று கேட்டேன். அவர் இல்லை கூடுதலாக வாங்குகிறேன் என்றார். பாவம் சேர்க்கவில்லை என்று சொல்லுகிறீர்கள் இது பாவமாக தெரியவில்லையா என்று கேட்டேன். இல்லை சார் எல்லாரும் வாங்குகிறார்கள் அதனால் நானும் வாங்குகிறேன் என்றார்.

பாவத்தை இப்படி தான் வாங்குகிறார்கள். இதுவும் பாவம் தான். நாம் செய்கின்ற பாவம் நமக்கே ஒரு சில நேரம் தெரியாது. பெரும்பாலும் இப்படி தான் பாவத்தை சேர்க்கின்றனர்.

அவர் பையன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நவாம்சத்தில் ஏழாவது வீட்டில் அமர்ந்து இருந்தது. அவரிடம் நீங்கள் செவ்வாய் கிரகத்திற்க்கு மட்டும் பரிகாரம் செய்யுங்கள் என்று சொன்னேன். இனிமேலாவது மின்சாரகட்டணத்தை குறைவாக வாங்குங்கள் என்றேன்.

பல பேர் இப்படி தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுபவர்கள் அனைவரும் மின்சாரக்கட்டணத்தை கூடுதலாக பெறுவது எல்லா ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை செய்தாலும் நீங்கள் பாவத்தை பெறுவீர்கள் என்பதை சொல்லவேண்டும் என்பதற்க்காக இந்த அனுபவத்தை தந்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: