Followers

Monday, June 23, 2014

வல்லவனுக்கு வல்லவன்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கும் என்னோடு இருந்தவர்களுக்கும் அதாவது நான் ஆன்மீகத்தை கற்கும்பொழுது இருந்தவர்களுக்கும் அடிக்கடி சண்டை வருவது உண்டு. அதாவது நான் பெரிய ஆளா நீ பெரிய ஆளா என்று சண்டை வரும்.

ஒருவர் கல்கத்தாவில் இருந்து வந்தவர். அவருக்கும் எனக்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு போட்டி நடந்துக்கொண்டே இருக்கும். அனைத்தும் சக்தியை வைத்து தான் போட்டி நடந்துக்கொண்டு இருக்கும். இரண்டு பேரும் நன்றாக பேசிக்கொள்வோம் ஆனாலும் இப்படி சண்டை நடக்கும்.

அவர் ஒரு பங்குசந்தை ஏஜென்ட் தொழில் செய்து வருபவர். அவர் என்னிடம் நான் உன் ஜாதககதம்பத்தை முடக்குகிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் நீங்கள் செய்துவரும் பங்குவர்த்தகத்தில் பெரிய இழப்பை வரவழைக்கிறேன் என்று சொல்லி இருவருக்கும் போட்டி நடைபெற்றது. 

எந்த ஒரு டெக்கினிக்கல் இல்லாமல் ஆன்மீகத்தை வைத்து செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு போர் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இது நடந்தது. அவரும் அவர் வைத்திருக்கும் சக்தியை வைத்து அடிக்கிறார். அதனை நான் தடுத்துக்கொண்டே வருகிறேன். அவரின் பங்குவர்த்தகத்தில் ஒரு சில வாரங்களில் அடிமேல் அடி விழுந்தது. ஆர்டர் போடாமலேயே ஆர்டர் விழும். வாங்குவதற்க்கு பதில் விற்பார். ஒரே வாரத்தில் கணக்கில் எந்த பணமும் இல்லை.

அதன் பிறகு இரண்டு பேருக்கும் சண்டை முடிந்தது. ஜாதககதம்பத்தை அவரால் முடக்கமுடியவில்லை ஆனால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அனைத்தையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக வருவான்.

இதனை எல்லாம் நீங்கள் நம்பமுடியாது ஆனால் உண்மையாக நடந்த ஒரு சம்பவம். பங்கு வர்த்தகம் என்ன உலகத்தையே ஆட்டி படைக்கலாம் ஆனால் தன் அடக்கம் வேண்டும். எனது குருவிற்க்கு இப்படி செய்கிறேன் என்று தெரிந்தால் அப்புறம் நான் தொலைந்தேன்.குருவிற்க்கு தெரியாமல் இப்படி சண்டை போடுவது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: