Followers

Wednesday, June 25, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் கேள்வி ஒன்றை கேட்டார். அவரின் கேள்வி ஆண்கள் மட்டும் படிக்கவும் பதிவை படித்துவிட்டு மசாலா மட்டும் ஒருவருக்கு குழந்தையின்மைக்கு காரணமாகுமா என்று கேட்டார். 

முதலில் நாம் உண்ணும் உணவை சரிசெய்யவேண்டும் என்பதற்க்காக சொன்னேன். மசாலாக்கள் நமது உடம்பிற்க்கு தேவையான சக்தியை கொடுக்கிறது அது இயற்கையாக கிடைக்கிறது. நமது நாட்டில் இயற்கையாக கிடைக்கும்பொருளை செயற்கையாக ஏன் தயாரித்து உண்ண வேண்டும்.

நமது வாழ்க்கை குழந்தைக்கு மட்டும் இல்லை. குழந்தை இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் உங்களின் வாழ்க்கையே வீண். இல்லறத்தில் இருப்பவர்கள் இருவரும் சரியான காமத்தொடர்பு வைத்துக்கொண்டால் உங்களுக்கு கடவுள் கூட தேவையில்லை. அதுவாகவே மோட்சத்தை அடையவைத்துவிடும்.

நமது வாழ்வை சின்னபின்னாமாக மாற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருள்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். அவரும் பிரதமராகிவிட்டார். அவர் சொன்ன சொல் வெளிநாட்டு பொருட்களை வாங்கிப்படுத்துவதை தவிர்த்தாலே நம் நாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவருக்காகவும் இதனை செய்யலாம். அவரை நான் பெருமைப்படுத்தி சொல்லவதற்க்காக சொல்லவில்லை. 

இந்த மசாலாக்களை இந்தியா கம்பெனிகளே தயாரித்து விற்றுவருகிறது. உடலுக்கு தீங்கு தரும் பொருட்களை வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் அதனை நாம் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்காமல் மருத்துவமனைக்கு ஏன் கொடுக்கவேண்டும். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

என்னிடம் காயத்ரி மந்திரப்பயிற்சி பெறுபவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன். இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தவேண்டும். உங்களின் வீடுகளுக்கு நான் வந்துக்கொண்டு இருக்கிறேன். மறுபடியும் நான் உங்களின் வீட்டிற்க்கு வரும்பொழுது சோதனை செய்வேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

வணக்கம் Rajesh sir,
இயற்கையான பொருட்கள் எங்கே கிடைக்கின்றது?

rajeshsubbu said...

வணக்கம் tamil ஒவ்வொரு ஊரிலும் விசாரித்து பார்த்தால் உங்களுக்கு அந்த கடைகளைப்பற்றி விவரம் தெரியும். அதோடு மொத்தமாக விற்பனை செய்யும் கடைளைப்பற்றியும் உங்களுக்கு தெரியவரும். அந்த கடைகளில் வாங்கும்பொழுது உங்களின் செலவு குறையும். நன்றி