Followers

Friday, June 6, 2014

வாழ்க்கை வாழ்வதற்க்கே


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு இப்பொழுது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் நிறைய பேர் என்னை தொடர்புக்கொண்டு நல்ல முறையில் கருத்துக்களை தருகின்றீர்கள் என்று சொல்லிவருகின்றனர். எங்களின் வாழ்க்கை இதுவரை அர்த்தமற்றதாக இருந்து வந்தது இனிமேல் நல்ல முறையில் வாழ்வோம் என்று சொல்லியுள்ளார்கள். 

பதிவை நான் தந்த நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்க்குள் எனக்கு ஆறு போன்கால் வெளிநாட்டில் இருந்து வந்தன. அதுவே எனக்கு மிகப்பெரிய ஊக்கம். ஏன் என்றால் என்னை இந்தியாவில் இருப்பவர்கள் புரிந்துக்கொள்வதை விட அயல்நாட்டில் இருப்பவர்கள் என்னை எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும். 

அயல்நாட்டிற்க்கு சென்ற தமிழர்கள் இல்லறத்தில் இருப்பவர்கள் இருவரும் புரிந்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு பதிவு அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்பொழுது எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன என்பது புரிகிறது.

சோதிடம் என்பது இருக்கின்றது இல்லை என்று நான் சொல்லவில்லை அதே நேரத்தில் சோதிடத்தை மீறி நாம் என்ன செய்தோம் என்பது இருக்கின்றது. கிரகங்கள் வேலை செய்வதால் நான் இப்படி இருக்கின்றேன் என்று சும்மா இருந்தால் நமது வாழ்க்கை வீணாக சென்றுவிடும். 

ஜாதகத்தை பார்த்து நாம் தெரிந்துக்கொண்டபிறகு அந்த கிரகத்திற்க்கு தகுந்தவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். நாம் நம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாம் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டு இருக்கவேண்டியது தான். இல்லறத்தில் பிரச்சினை வருவது இயற்கையான ஒன்று ஆனால் அந்த பிரச்சினை கிரகத்தால் தான் வருகிறது என்று இருவரும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்துவிட்டால் கிரகங்கள் உங்களை ஒன்றும் செய்யாது.

இனிவரும் பதிவுகள் உங்களை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்ற வழி செய்வது போல் எழுதுகிறேன் அதனை பின்பற்றி உங்களின் வாழ்க்கையை மகிழ்வோடு வாழுங்கள்.எல்லாம் வல்ல நமது அம்மன் இருக்கின்றது. கவலைப்படாமல் இருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.