Followers

Sunday, June 29, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    
இராஜராஜேஸ்வரி 
                    சாகிற நாள் தெரிந்தால் வாழுகிற நாட்கள் நரகமாகிவிடுமே..!

வணக்கம் கேள்வி கேட்டதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாகிற நாள் சாதாரணமானவர்களுக்கு தெரிந்தால் பயம் வரும் ஆன்மீகவாதிக்கு தெரிந்தால் அது மகிழ்ச்சியான விசயம். ஒரு மனிதன் தன்னையே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறான். பிறக்கும்பொழுதே அவன் இறப்பை நோக்கி தான் சென்றுக்கொண்டு இருக்கிறான். தினமும் அவனுள் இறப்பு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் அதனை அவன் அவனுக்குள் தெரியாமல் வைத்துக்கொள்கிறான். அதனைப்பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் வைத்துக்கொள்கிறான்.

தன்னுள் இறப்பு நடப்பதை உணர்பவன் விழித்துக்கொண்டு அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை அவன் கண்டுபிடித்துவிடுவான். அவன் இறப்பை கண்டு அஞ்சுவதில்லை மாறாக மகிழ்ச்சியாக மாற்றிவிடுகிறான்.

நீங்கள் நல்ல காயத்ரி மந்திர உபாசகர் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வழியாக நமது நண்பர்களுக்கு கீழே உள்ளதை சொல்லுகிறேன். மரணத்தை கண்டு பயந்தவன் தன்னை ஆன்மீகத்தில் இணைத்தவுடன். உடலில் இருந்து ஆத்மா செல்வதை இறப்பு என்று சொல்லுகிறார்கள். உயிரோடு இருக்கும்பொழுதே அவன் வெளியில் செல்ல நினைக்கிறான். சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துவிடுவான். உடல் தேவைப்படும்பொழுது உடலுக்குள் வந்துவிடுவான். உடல் தேவையில்லை என்றால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பான். ஏன் உடலுக்குள்ளேயே ஆத்மாவை வைத்து சுற்றும் வித்தையை தான் நீங்கள் காயத்ரி மந்திரம் வழியாக கற்று இருப்பீர்கள் அல்லவா.

இப்படி இருப்பவர்களுக்கு அவர்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு மரணம் வரும். அவர்களுக்கு தனக்கு எப்பொழுது மரணம் வரும் என்பதை அவர்களே நிர்ணித்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள். அதனால் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆன்மீகவாதிகள் இல்லாதவர்கள் நீங்கள் சொல்லுவது போல் மரணத்தை கண்டு அஞசுவார்கள். வாழுகின்ற நாட்களில் ஒழுங்காக அவர்களால் வாழமுடியாது.

நீங்கள் எனது பதிவில் வந்து கேள்வி கேட்டதற்க்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லுகிறேன். நன்றி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அழகான விளக்கத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்..

உறங்குவதுபோலும் சாக்காடு
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு ..