Followers

Wednesday, June 4, 2014

வழிகாட்டுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    புதியதாக நிறைய நண்பர்கள் வருகின்றனர் அவர்கள் ஜாதககதம்பத்தை படித்துவிட்டு இத்தனை நாட்கள் இதனை படிக்காமல் இருந்துவிட்டேனே என்று சொல்லுகிறார்கள்.

அவர்கள் நிறைய இழந்துவிட்டு வந்துவிட்டு அதன் பிறகு அவர்களுக்கு இது தெரியவருகிறது. எந்த ஒரு கிரகத்தின் அதிவேகத்தையும் பிராத்தனை மற்றும் பரிகாரம் வழியாக குறைத்துவிடலாம். ஒரு சிலர் சொந்த நிலத்தை எல்லாம் இழந்துவிட்டு வருகின்றனர்.

பணம் சம்பாதித்துவிடலாம் ஆனால் சொந்தமாக முன்னோர்கள் வாங்கிய இடத்தை இழந்துவிட்டால் மறுபடியும் அந்த நிலம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அப்படி இழந்தவர்கள் நிறைய பேர் வந்து இதனை முன்பே படித்துவிட்டு இருந்தால் நாங்கள் இழந்து இருக்கமாட்டோம் என்று சொல்லுகின்றனர்.

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு பாதிப்புக்கும் என்னால் முடிந்தளவு பரிகாரத்திற்க்கு வழி சொல்லியுள்ளேன். அதனை ஒருவர் கடைபிடித்து வந்தாலே அவர்கள் அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கமுடியும். கண்டிப்பாக இது எல்லாம் பரிகாரமாக என்று நினைக்காமல் செய்தால் மட்டுமே அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.

நீங்கள் செய்யவேண்டியது அடுத்தவர்களின் ஜாதகத்தை வாங்கிபார்த்துவிட்டு அவர்களுக்கு உங்களால் முடிந்தளவு வழிகாட்டிவிடுங்கள். ஜாதககதம்பத்தை படிக்கசொல்லுங்கள். படிக்கும் வசதி இல்லாதவர்களுக்கு உங்களின் வழிகாட்டுதலை கொடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: