Followers

Tuesday, June 10, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் விஷேசமான ஒரு நாள். அதாவது செவ்வாய்கிழமை அம்மன் கோபமாக இருக்கும் இந்த நாள் நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்.

பொதுவாகவே எந்த தெய்வத்தை வணங்கினாலும் செவ்வாய்கிழமை நாளை தவறவிடமாட்டார்கள். இந்த நாளில் உட்கார்ந்து பூஜை செய்துவிட்டால் ஒரு வாரத்தில் நமக்கு எதிராக உள்ளவர்கள் நம்மை ஏமாற்றியவர்கள் அனைவருக்கும் ஒரு காட்டு காட்டிவிடும் அம்மன்.

செவ்வாய்கிழமை முழுவதும் அம்மனி்ன் அருளில் இருப்பேன். அப்பொழுது நமக்கு என்ன என்ன தேவையோ அத்தனை வேலையும் நடைபெற்றுவிடும்.

இந்த நாளில் தான் எனக்கு நம்ம ஆளங்க செய்த வேலை எல்லாம் தெரியவரும். அம்மனை வெளியில் அனுப்பவதே செவ்வாய்க்கிழமையாக தான் அதிகப்பட்சம் இருக்கும்.

நீங்கள் எந்த உபாசாகராக இருந்தாலும் செவ்வாய்கிழமை ஒரு வேண்டுதலை வையுங்கள். உடனே உங்களுக்கு விடை கிடைத்துவிடும். நீங்கள் நினைப்பது நடக்கும்.

அதே நேரத்தில் அடுத்தவர்களை நாம் கெடுக்கவேண்டும் என்று இந்த நாளில் நினைத்துவிடாதீர்கள். ஒரு சில நேரங்களில் கோபமாக நேராக சென்று பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் நம்மால் பிறர் பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். எதற்கு தேவையற்ற பாவம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: