Followers

Sunday, June 8, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்கள் ஆனால் செய்வது எல்லாம் பணக்காரர்களுக்கு தானே செய்கின்றீர்கள். தொழில் அதிபர்களுக்கு மட்டும் செய்கின்றீர்கள். எங்களை போல் இருப்பவர்களையும் தூக்கிவிடுலாமே என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார்.

நண்பர்களே உங்களைப்போல் உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த பரிகாரத்தை சொல்லி செய்யவைக்கிறேன். தொழில் அதிபா்களுக்கு செய்வது எல்லாம் நான் தனியாக செய்வதில்லை என்ற உண்மை உங்களிடம் இதுவரை சொல்லாமல் இருந்து வந்தேன். தொழில் அதிபர்கள் வழியாக பணம் திரட்டப்படுகிறது. அதில் எனக்கு வரும் சதவீதம் மிக குறைவு. தொழில் அதிபர்களுக்கு செய்வதன் பின்னால் பல ஆன்மீகவாதிகளின் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு நபருக்கு பணம் வந்து கொட்டிக்கிறது என்றால் சும்மா கிடையாது. அந்தளவுக்கு வேலை செய்துக்கொடுத்துவிடுவேன். பணம் வரவர எனது பங்கு வந்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்படி இல்லை அம்மன் அந்த பக்கம் பார்க்ககூட செய்யாது.

தொழில் அதிபர்களுக்கு செய்வது என்பது பெரிய வேலை அதன் வழியாக பெரும் பணத்தை திரட்ட முயற்சி செய்கிறோம். வேறு எந்த ஒரு வழியையும் நாங்கள் செய்வதில்லை. தொழில் அதிபர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பலம் மிக அதிகம். ஏகாப்பட்ட சாமியார்களின் கைவரிசை அதில் இருக்கும். அந்த பணம் பலவாறு பிரிக்கப்பட்டு போய் சேரவேண்டிய இடத்திற்க்கு சேரும். பத்து சதவீத பணத்தை ஒரு தொழில் அதிபர்களிடம் இருந்து வாங்குகிறோம். 

பத்து சதவீதத்தில் ஒரு சதவீதம் குறைந்தாலும் இரண்டு மாதத்தில் அந்த கம்பெனியை கை விட்டுவிடுவோம். அதன் பிறகு எந்த ஒரு தொடர்பும் இருக்காது.  நான் பணத்தை எனது பங்குதாரார்களிடம் கொடுக்கவில்லை என்றால் அவர்களே இதனை எடுத்துவிடுவார்கள்.

தொழில் அதிபர்கள் எந்த நேரத்திலும் என்னை விட்டு போவதாக இருந்தால் போய்விடலாம். அவர்களை நாங்கள் எந்த தொந்தரவும் செய்வதில்லை. இன்முகத்தோடு அனுப்பி வைத்துவிடுவோம். அதன் பிறகு அம்மன் அவர்களிடம் செல்லாது. ஒரு நபர் சென்றால் எனக்கு பெரிய இழப்பு ஒன்றும் கிடையாது. அவர்களை நாங்கள் பயமுறுத்துவதும் கிடையாது.

எங்களிடம் தொழில் கூட்டு வைத்துக்கொள்ள நிறைய ஆட்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களை எடுத்து அவர்களுக்கு செய்துக்கொடுத்துக்கொண்டிருப்போம்.

உங்களுக்கு என்னால் இப்படி இப்படி செய்து பாருங்கள் என்று சொல்லமுடியுமே தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது. ஏன் என்றால் எதனை எல்லாம் செய்யமுடியுமே அதனை எல்லாம் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன். நீங்கள் அதனை எடுத்து செய்துக்கொள்ளலாம்.

பணம் ஒரு வழியில் மட்டுமே திரட்டப்படும்பொழுது அதற்கு முக்கியதுவம் கொடுப்பது உண்டு. தனிநபர் என்று வரும்பொழுது அவர்களுக்கு பதிவிலேயே பரிகாரத்தை கொடுத்துவிடுகிறேன். அதனை நீங்களே எடுத்து செய்துக்கொள்ளவேண்டியது உங்களை உயர்த்த வழி வகுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: