Followers

Sunday, June 15, 2014

அம்மன் அருள்



வணக்கம் நண்பர்களே!
                    தினமும் நான் பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்யும்பொழுது ஜாதககதம்பத்திற்க்கு வருபவர்கள் ஏதாவது ஒரு ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து அவர்கள் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையை அம்மனிடம் வைப்பேன்.

இந்த கோரிக்கை வைத்ததால் இன்று பல பேர் அவர் அவர்களின் வீடுகளில் பல ஆன்மீக வழிப்பாட்டுகளை செய்து வருகின்றனர். அதனை நான் பூஜை முடிந்து அமரும்பொழுது எனக்கு தெரியும். யாராவது ஒருவர் எனக்கு போன் செய்து இந்த வழிப்பாட்டை செய்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லுவார்கள். எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக அது இருக்கும்.

என்னை பின் தொடர்பவர்கள் என்று சொல்லிக்கொள்ள இதனை எல்லாம் நான் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அவர்களை வாழ்க்கையை சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நல்ல எண்ணத்திற்க்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டு நிறைய வழிகளை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

நிறைய ஆன்மீகப்பதிவுகள் மோட்சத்தைப்பற்றி சொன்னாலும் ஒருவன் நன்றாக வாழ்ந்தால் தான் அவன் மோட்சத்தைப்பற்றி நினைக்கமுடியும். நன்றாக வாழவில்லை என்றால் அவன் வாழ்க்கை வீண் தான் சொல்லவேண்டும். ஒரு சில ஆன்மீக பெரியவர்கள் வருவதால் அவர்களுக்கு மாேட்சத்தைப்பற்றி எழுதுவேன். 

நீங்கள் எந்த நிலையில் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பார்த்து அந்தந்த வழிகளை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அம்மன் உங்களுக்கு அருளை கண்டிப்பாக தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: