Followers

Friday, July 4, 2014

ஆன்மீக அனுபவங்கள் 168


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை என்று சொல்லிருந்தேன்.  அதிலும் ஒரு நன்மை நடந்தது என்றால் முழு நேரமும் அம்மனின் கோவிலேயே இருந்தது மட்டும் எனக்கு நல்லது நடந்தது என்று சொல்லலாம். அப்படி ஒரு நிம்மதியை தந்தது அம்மன்.

உங்களின் வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருந்தால் இருவரும் ஆன்மீகத்தில் இருக்கவேண்டும் அல்லது இருவரும் நாத்திகவாதியாக இருக்கவேண்டும் என்று நான் பல இடங்களில் நமது நண்பர்களுக்கு சொல்லுவேன். கணவர் ஆன்மீகத்தில் இல்லாமல் மனைவி மட்டும் ஆன்மீகத்தில் இருந்தால் அவர் என்ன தான் சாமி கும்பிட்டாலும் அந்த பெண்ணால் ஒரு முழு நிலையை அடையமுடியாது.

சக்தியை பெறுவதற்க்கு தான் ஆன்மீகம். அந்த சக்தியை பெற்றுக்கொண்டு நீங்கள் வீட்டிற்க்கு வரும்பொழுது உங்களின் கணவர் அங்கு இருந்தால் அதாவது அவர் ஆன்மீகத்தில் இல்லாமல் இருந்தால் அவர் உங்களின் சக்தியை எடுத்துவிடுவார். அதுவாகவே சென்றுவிடும்.

அவரின் உடல் அதனை தக்கவைத்துக்கொள்ளாது. அவர் கொஞ்ச நேரத்திற்க்கு உற்சாகத்தில் இருப்பார். அதன் பிறகு அந்த சக்தி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிடும். பல குடும்பங்களில் பெண்கள் நல்ல பக்தியாக இருந்தும் அவர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் அடையாமல் செல்வதற்க்கு இது தான் காரணமாக இருக்கமுடியும். 

கணவன் மனைவி இருவரும் ஆன்மீகத்தில் இருக்கும்பொழுது எடுத்த சக்தியை சரியாக பயன்படுத்த முடியும். ஒருவர் மட்டும் ஆன்மீகத்தில் இருந்தால் அவர் எடுத்த சக்தியை எதிர் நபர் எடுத்துவிடுவார். சக்தியை பேலன்ஸ் செய்யும்பொழுது மட்டுமே அதனால் பயன்பெறமுடியும். 

பல குடும்பங்களுக்கு நான் செல்லும்பொழுது ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் இல்லாமலேயே இருக்கின்றார்கள். கணவன் நல்ல பக்திமானாக இருந்தால் அதற்கு எதிராக மனைவி இருக்கிறார். மனைவி நல்ல பக்திமானாக இருந்தால் அதற்கு எதிராக கணவன் இருக்கிறார். நான் அவர்களின் மனஓட்டத்தை வைத்தே இதனை கண்டுபிடித்துவிடுவேன்.

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் உங்களின் துணைவரும் ஆன்மீகவாதியாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள் எங்கு சுற்றி சக்தியை எடுத்துவந்தாலும் அந்த சக்தி ஒரு நாளும் உங்களிடம் இருக்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: