Followers

Tuesday, July 15, 2014

விரைய தசா பகுதி 32


வணக்கம் நண்பர்களே !
                    விரைய தசாவைப்பற்றி பார்த்துவந்தோம். அதில் ஒரு அனுபவத்தை பார்க்கலாம். ஒருவருக்கு குரு கிரகம் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தது. அவருக்கு குரு தசா ஆரம்பித்தது. 

குரு தசா ஆரம்பித்து சுயபுத்தி முடியும் வரை நிறைய மருத்துவ செலவுகளை அவருக்கு ஏற்படுத்தியது. அவருக்கு இரண்டு வாரிசுகள். இரண்டு பேரும் ஆண் வாரிசு.

குரு தசா சுயபுத்தியில் அவருக்கு நோய் ஏற்பட்டு அவருக்கு நிறைய வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அவர் சேர்த்து வைத்திருந்த பணம் முக்கால்வாசியை மருத்துவமனைக்கே செலவு செய்தார். இந்த காலத்தில் நகர்புறத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று வைத்தியம் பார்க்க வேண்டும் என்றால் சும்மாவா இருக்கின்ற நிலத்தை எல்லாம் விற்றால் தான் பார்க்கமுடியும்.

சுயபுத்தி முடிந்தவுடன் அவர் மனதில் நாம் இல்லாமல் சென்றுவிடும் அதனால் தனது மகனுக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்று எண்ணி முடிவு செய்து வரன் பார்த்து திருமணம் முடித்தார். அந்த பையன் நல்ல வேலையில் இருந்ததால் அவருக்கு திருமணம் எளிதில் முடிந்தது. ஒரே பெண் நல்ல வசதி வாய்ப்பு நன்றாக இருந்தது.

முதல் மகனின் திருமணம் நல்ல முறையில் முடிந்து சந்தோஷத்தோடு இருந்தார். கொஞ்ச நாளில் அடுத்த பையனுக்கும் திருமணத்தை முடித்தார் அவருக்கும் நல்ல பெண் அமைந்தது. இரண்டு பேருக்கும் திருமணம் முடித்துவிட்டு இவர் தற்பொழுது நல்ல முறையில் இருக்கிறார்.

விரைய வீட்டில் இருந்து குரு தசா தொடங்கியவுடன் அதுவும் சுயபுத்தியில் இருந்ததால் மருத்துவசெலவை ஏற்படுத்திய கிரகம் அதன் பிறகு வந்த புத்தியில் நல்ல வருமானத்தை கொண்டு வந்து சேர்த்தது. விரைய வீடாக இருந்தாலும் சுபவழியில் நல்ல வருமானத்தையும் தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: