Followers

Wednesday, July 16, 2014

விரைய தசா பகுதி 33


வணக்கம் நண்பர்களே! 
                    விரைய தசாப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒரு அனுபவத்தை பார்க்கலாம். ஒருத்தருக்கு விரைய வீட்டில் சூரியன் இருந்தது. அவருக்கு சூரிய தசா நடைபெற ஆரம்பித்தது. 

அவர் என்னை சந்திக்க தனியாக வந்திருந்தார். அவருக்கு வயது 45 ஆனது. அவரிடம் நான் உங்களது வீட்டில் யாராவது இருக்கிறார்களாக என்று கேட்டேன். அவர் எனது பையன் உள்ளான் சார் என்றார். மனைவிஅலுவலகத்திற்க்கு சென்றுள்ளார் என்றார்.

நான் இப்படி கேட்டதை அவர் புரிந்துக்கொண்டு நீங்கள் ஒளிவு மறைவின்றி பலனை சொல்லுங்கள் சார். அனைத்தும் கடவுள் விட்ட வழி என்று சொன்னார். அவரிடம் நான் உங்களுக்கு கண்டம் இருக்கின்றது சார் என்றேன்.

சூரியனுக்கு தகுந்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். அவர் நடப்பது நடக்கட்டும் சார் என்றார். அவர் மரணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவத்தை அடைந்திருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன்.

அவர் என்னிடம் ஆன்மீகத்தைப்பற்றி நிறைய பேசினார். அது நட்பாகவே மாறிவிட்டது. அவரிடம் நான் நன்றாக பழக ஆரம்பித்தேன். சரியாக ஆறு மாதங்களுக்கு பிறகு அவர் ஹர்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். சூரிய தசாவில் இதய நோய் வரும். அதுவும் விரைய வீட்டில் இருந்து நடத்தும்பொழுது உயிரையும் காவு வாங்கிவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: