Followers

Thursday, July 17, 2014

விரைய தசா பகுதி 34


வணக்கம் நண்பர்களே!
                    விரைய வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் ஒரு அனுபவத்தை இப்பதிவில் பார்க்கலாம். பூர்வபுண்ணியாதிபதியான ஐந்தாவது வீட்டு அதிபதி சனிக்கிரகம் விரையாதிபதி வீட்டில் இருந்தார். 

சொந்த ஊரை விட்டு வெளியில் வந்து தங்கி இருந்தார். பொதுவாக பூர்வபுண்ணியம் கெடும்பொழுது அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியில் சென்று தங்கிவிடுவது நல்லது.

இவரும் சொந்த ஊரைவிட்டு வெளியில் வந்து தங்கியிருந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு பையன் இரண்டு பெண்கள். நான்கு பேரும் படித்தது எல்லாம் சொந்த நாட்டிலேயே படித்தார்கள். அவருக்கு சனி தசா தொடங்கியவுடன் நான்கு பேரும் வெளிநாட்டிற்க்கு சென்று தங்கிவிட்டார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் மட்டும் வெளிநாட்டில் சென்று தங்கவில்லை. இவர் இருந்த ஊரிலேயே இருக்கிறார். அவ்வப்பொழுது சென்று வருகிறார். ஐந்தாவது வீட்டு அதிபதியாக இருந்த சனிக்கிரகம் விரைய வீட்டில் அமர்ந்து தசாவை நடத்தியதால் புத்திரர்கள் வெளிநாட்டில் தங்குவது போல் செய்துவிட்டது.

ஒரு சிலருக்கு இப்படியும் நன்மையை அளிக்கும். விரைய தசா ஒரு சிலருக்கு நல்லதையும் செய்துவிடும். லக்கினத்திற்க்கு பனிரெண்டில் சனி அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது அவருக்கு கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்பொழுது தசா நடந்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: