Followers

Wednesday, July 2, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் தொடங்கிய நேரத்தில் சொந்த வேலை வந்துவிட்டது  அதனால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. கையில் லேப்டாப் இருந்தாலும் வைத்திருக்கும் டேட்டா கார்டு வேலை செய்ய மாட்டேன்கிறது. கிராமத்தில் இருப்பதால் இந்த பிரச்சினை.  ஒரு சில நேரத்தில் சிக்னல் கிடைக்கிறது.

பல நண்பர்கள் தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார்கள். சார் எப்பொழுது வருவீர்கள் என்று கேட்கிறார்கள். சொந்த வேலையில் இருப்பதால் உடனே பதிலை சொல்லமுடியவில்லை. எப்படியும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை வந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

சொந்த ஊரில் இருப்பதால் அம்மனின் கோவிலில் இருக்கமுடிகிறது. ஒரு சில வேலைகளையும் அம்மன் கோவிலில் நடத்தமுடிகிறது. அது மட்டும் நிம்மதியான  வேலையாக எனக்கு இருக்கிறது. 

அம்மன் தன்னோடு வைத்திருப்பதற்க்கும் ஒரு சில காரணங்கள் இல்லாமல் இருக்காது. ஏதோ ஒன்றை செய்ய நினைக்கிறது என்று நினைக்கிறேன். அதன் காரணம் சென்னை திரும்பியவுடன் தெரியவரும்.சென்னை திரும்பும்வரை காத்திருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: