Followers

Thursday, July 10, 2014

தியானம்


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் கடைபிடியுங்கள் பதிவை படித்துவிட்டு எனக்கு போன் செய்து உண்மையான விசயம் சார் என்று சொன்னார்கள். என்ன நடக்கிறதோ அதனை சொல்லுகிறேன். அதே நேரத்தில் தியானத்தைப்பற்றி மேலும் உங்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் கேட்டார்கள்.

தியானம் சொல்லிக்கொடுக்கும் சாமியார்கள் அனைவரும் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு தியானத்தைப்பற்றி ஒரு கருத்தை சொல்லிவிடுகிறேன். 

இல்லறத்தில் இருப்பவர் ஒருவர் தியானத்தை தொடர்ந்து செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்க்கு காமத்தின் மேல் உள்ள நாட்டம் குறைந்துவிடும். பல பேர்கள் இதனை தெரியாமல் செய்துக்கொண்டு வருகிறார்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவுக்கு தியானம் ஒரு எதிரியாக தான் இருக்கும்.

பின்பு எப்படி தியானத்தை கற்று தரும் சாமியார்கள் காமவிசயத்தில் விழுகிறார்கள் என்று கேட்கிறீர்களா சாமியார்கள் அனைவரும் பூஜை மட்டும் தான் செய்வார்கள். வெளியில் சும்மா கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். பூஜை மட்டும் செய்வார்கள். பூஜை அவர்களுக்கு செய்துக்கொள்வார்கள் தியானத்தை உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடுவார்கள்.

நீங்கள் வேண்டுமானால் நன்றாக கவனித்து பாருங்கள். தியான வகுப்பிற்க்கு சென்ற பிறகு உங்களுக்கு காமத்தின் மீது நாட்டம் இருக்காது. ஒழுங்கான தியானமாக இருந்தால் கண்டிப்பாக நாட்டம் குறையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: