Followers

Friday, July 11, 2014

நடந்தது உண்மை


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு வேலை செய்ததை பதிவில் சொல்லிருந்தேன். அது பெரிய வேலை என்பதால் பிரச்சினையும் அதுபோலவே வந்தது. பொதுவாக இதனை யாருக்கும் எளிதில் இறங்கி செய்வது கிடையாது. அவர் நீண்ட கால வாடிக்கையாளர் என்பதால் செய்தேன்.

பொதுவாக எந்த வேலை செய்தாலும் மிக மிக எச்சரிக்கையுடன் இருப்பேன். இதிலும் எச்சரிக்கையுடன் தான் இருந்தேன். அப்படி இருந்தும் அவருக்கு பிரச்சினையை அதிகம் கொடுத்துவிட்டது. இந்த மாதிரி வேலைகள் செய்யும்பொழுது அம்மனுக்கு பெரிய பூஜை வைத்து அதன் பிறகு செய்வது வழக்கம். இதில் நான் அப்படி செய்யாமல் நேரடியாக இறங்கியவுடன் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

நான் அன்று என்ன நடந்ததோ அதனை அப்படியே உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது வழக்கம். அந்த நபருக்கு செவ்வாய் கிரகம் மிகப்பெரிய பிரச்சினை தந்துக்கொண்டு இருக்கிறது. எப்பொழுது முதலில் செவ்வாய் கிரகத்தை கை வைக்க மாட்டேன். கடைசியில் தான் செவ்வாய் கிரகத்திற்க்கு செய்வது உண்டு. இவருக்கு செவ்வாய் கிரகம் தான் பிரச்சினை தருகி்றது என்பதால் முதலில் அதனை கை வைக்க போய் சிக்கல் ஏற்பட்டது.

பிற கிரகத்தை விட செவ்வாய் கிரகம் விரைவாக பலனை கொடுக்கும் தன்மை உடையது. அதே நேரத்தில் விரைவில் பலனை கொடுத்துவிடும். அப்படி தான் நேற்று கொடுத்தது. நீங்களும் செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு முன் நல்ல நற்பணிகளை செய்துவிட்டு பிறகு செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் செய்யுங்கள்.

நாளை மதியம் திருப்பூர் பயணம். ஞாயிறுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை திருப்பூரில் இருப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: