Followers

Sunday, July 13, 2014

உள்ளுக்குள் தேடுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு தெரிந்த நண்பர்கள் என்னிடம் நீ எப்படி இதனை எல்லாம் செய்துக்கொடுக்கிறாய். நாங்கள் எல்லாம் கோவிலுக்கு செல்லுகிறோம் நீ கோவிலுக்கு கூட செல்வதில்லை பிறகு எப்படி பிறர்க்கு நல்லதை செய்துக்கொடுக்க முடிகிறது என்று கேட்பார்கள். அவர்களுக்கு சொல்லுவதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நாம் என்ன தான் வெளியில் தேடினாலும் முதலில் உங்களுக்குள் தேடினால் மட்டுமே அனைத்திற்க்கும் விடைக்கிடைக்கும். உங்களுக்குள் நடப்பது என்ன என்று பார்க்கவேண்டும். உங்களுக்குள் பார்த்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம். வெளியில் தேடினால் அங்கே ஒன்றும் நடக்காது.

வெளியில் தேடினால் உங்களை ஒரு வரையறுக்குள் அடைத்துவிடுவார்கள். அப்புறம் அந்த நபருக்காக அல்லது இயக்கத்திற்க்காக நீங்கள் கொடி பிடிக்கவேண்டும். அதனை விட்டு உங்களை வெளியில் வரவிடாமல் செய்துவிடுவார்கள்.

உங்களுக்குள் நடப்பதை மட்டும் கவனிக்க ஆரம்பித்தால் போதும். நீங்கள் பெரிய மகானாக மாறிவிடுவீர்கள். உங்களுக்குள் இந்த பிரபஞ்சம் இருக்கின்றது என்பதை உங்களுக்குள் தேடும்பொழுது மட்டுமே கிடைக்கும். அந்த பிரபஞ்சத்தை நான் பார்த்த காரணத்தால் உங்களிடம் சொல்லுகிறேன்.

வெளியில் தேடுவது தவறு என்று சொல்லவில்லை. அங்கேயே தேடிக்கொண்டு இருக்ககூடாது. கொஞ்ச காலத்தில் திரும்பிவிட்டால் போதும். உங்களை நீங்கள் தேடிவிட்டால் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: